கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்
வாணியம்பாடி அடுத்த சி.வி.பட்டறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு
பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்த தூய்மை பணியாளருக்கு மாணவர்கள் உதவியதாகவும் , தகவல் அறிந்து மாணவர்களை உடனே வகுப்பறைக்கு அனுப்பி விட்டதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம்
வாணியம்பாடி சி.வி.பட்டறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேல்தளத்தில், கட்டட பணியில் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் ஈடுபடும் காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமையாசிரியை , வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் அதனை சரிசெய்ய, தூய்மை பணியாளர்களுடன் மாணவர்களும் உதவினர் என்றும், தகவல் அறிந்து மாணவர்களை வகுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தினோம் என்றும் கூறினார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...