Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026

 






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:491

குறள்:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.  


பொருள்:

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம்.பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டாம்.

பழமொழி :

Old is gold.

பழமையே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கைத்தொழில் கற்ற இளைஞன், தன் கைகளால் தன் எதிர்காலத்தை வடிவமைக்கிறான்.”

Thought for the Day :

You can learn from yesterday and prepare for tomorrow, but don’t forget to actually live today.

பொது அறிவு : 

1. தென்னாட்டின் திலகர் என்றழைக்கப்படுபவர் யார்? 

வ. உ .சிதம்பரனார். 

2. தென்னாட்டின் சாக்ரடீஸ் என்றழைக்கப்படுபவர் யார்? 

பெரியார்.

English words :

1. Feasible – Possible to do, செய்யக்கூடியது.


2. Impartial – Fair to everyone, பாரபட்சமற்றவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

காந்தியடிகளின் கிராம சுயாட்சி (Gram Swaraj) என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் அல்ல. 

ஒவ்வொரு கிராமமும்:

தன்னிறைவு + உள்ளூர் வேலைவாய்ப்பு + உள்ளூர் உற்பத்தி + மக்களின் பங்கேற்பு + சுயநிர்வாகம் என்ற அடிப்படையில் வளர வேண்டும் என்பதாகும்.

NMMS :

SAT 

மனிதக் கண்ணால் __________________ மில்லியன் நிறங்களை வேறுபடுத்திக் காண இயலும். 

(1) 12-24.

 (2) 10-20. 

(3) 1-10. 

(4) 10-12. 

விடை: (4) 10-12.

நீதிக்கதை

 பிடிவாதத்தின் விலை


ஒரு சிறிய ஊரில் மித்ரா என்ற பெண் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் புத்திசாலியும் திறமையானவளும்தான். 


ஆனால் அவளிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது—தனக்குப் பிடித்ததுதான் சரி என்று நினைப்பது.

பெற்றோர் ஏதாவது அறிவுரை கூறினால்,

“எனக்குத் தெரியும்! நீங்கள் எப்போதும் என்னையே குறை சொல்கிறீர்கள்!” என்று கோபமாகப் பேசுவாள்.


ஒருநாள் மித்ரா தனது நண்பர்களுடன் வெளியே செல்ல முடிவு செய்தாள். அன்று மாலை வீட்டிற்கு சீக்கிரம் வரும்படி அவளுடைய அம்மா கூறினார்.

“மித்ரா, இன்று மழை வரப்போகிறது. சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிடு. தாமதமாக வெளியே இருக்க வேண்டாம்,” என்றார் அம்மா.


ஆனால் மித்ரா, “எனக்கு ஒன்றும் ஆகாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் அறிவுரை சொல்லாதீர்கள்!” என்று கோபமாகப் பேசிவிட்டு சென்றாள்.


மாலை நேரம் ஆனது. வானம் இருண்டு, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் மித்ரா இன்னும் வீடு திரும்பவில்லை.


நேரம் செல்லச் செல்ல அவளுடைய பெற்றோரின் கவலை அதிகரித்தது. அம்மா மீண்டும் மீண்டும் வாசலுக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா மித்ராவின் நண்பர்களுக்கு தொலைபேசி செய்து அவள் எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார். 


மழையையும் பொருட்படுத்தாமல், அப்பா அவளைத் தேடி அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்றார். அம்மா வீட்டில் இருந்து அவள் பாதுகாப்பாக வர வேண்டும் என்று கவலையுடன் காத்திருந்தார்.


“காலையில் என்னிடம் கோபமாகப் பேசினாலும் பரவாயில்லை... என் மகள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்தால் போதும்,” என்று அம்மா கண்ணீருடன் கூறினார்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, மித்ரா தனது நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அவள் வீட்டிற்கு வந்தபோது, வாசலில் கவலையுடன் காத்திருந்த பெற்றோரைப் பார்த்தாள்.

அவள் அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றாள்.


அம்மா கோபப்படாமல், “நீ பாதுகாப்பாக வந்துவிட்டாயே, அதுதான் எங்களுக்கு முக்கியம்,” என்று மட்டும் கூறினார்.

அந்த வார்த்தைகள் மித்ராவின் மனதைத் தொட்டன.


“நான் அவர்களிடம் கோபமாகப் பேசினேன். அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ஆனால் நான் தாமதமானதும், அவர்கள் கோபத்தைப் பற்றி நினைக்காமல் என்னுடைய பாதுகாப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறார்கள்,” என்று அவள் எண்ணினாள்.


அப்போது பாட்டி மித்ராவிடம் மெதுவாகக் கூறினார்:

“கண்ணே, பெற்றோர் சொல்வதெல்லாம் கட்டளை அல்ல; பல நேரங்களில் அவர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாதுகாப்பான வழி. கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாகச் சொல்லலாம். ஆனால் அவர்களை எதிர்த்து, காயப்படுத்தும் வார்த்தைகளில் பேசுவது நல்லதல்ல.

உனக்காக வாழும் மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பிடிவாதம் நம்மை உயர்த்தாது; அன்பானவர்களின் மனதை மட்டுமே காயப்படுத்தும்.”


மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது.

“பாட்டி, இனிமேல் எனக்குப் பிடித்ததை மட்டும் நினைக்காமல், அம்மா அப்பாவின் அக்கறையையும் புரிந்துகொள்வேன். அவர்களுடன் கருத்து வேறுபாடு வந்தாலும் மரியாதையாகப் பேசுவேன்,” என்றாள்.


அன்று முதல் மித்ரா தனது பிடிவாதத்தைக் குறைத்து, பெற்றோரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசத் தொடங்கினாள்.


🌸 நீதி:


பெற்றோர்களின் அறிவுரையின் பின்னால் அவர்களின் அன்பும் அக்கறையும் இருக்கும். கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரியவர்களை எதிர்த்து பேசாமல் மரியாதையுடன் பேசுவதே நல்ல பண்பு.

இன்றைய செய்திகள்

10.09.2026

🗒️தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🗒️இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்
போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்.

🗒️கடல்சார் ஆய்வில் புதிய மைல்கல்: ‘சாகர் மந்தன்’ ஆய்வுக் கப்பல் செயல்பாட்டை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
தொடங்கி வைத்தார்.

🗒️விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திய அண்டார்டிகா: தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனி அதிகரித்
துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: 2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா... 

🏀ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Today's Headlines

🗒️ The quarterly examination timetable for government, government-aided, and private schools in Tamil Nadu has been released.

🗒️ Minister Rajmohan distributed prizes to the winners of the State Art Competitions for young artists.

🗒️ New milestone in marine research: Union Minister Jitendra Singh launched the operations of the research vessel ‘Sagar Manthan’.

🗒️ Antarctica surprises the scientific world: Antarctica temporarily gained 695 billion tonnes of ice.

🏀 Sports News

🏀 Para World Archery: India won two gold medals.

🏀 The Indian team comprising Harvinder Singh and Vijay Chandi defeated Slovakia 6–2 to win the gold medal.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive