NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6ஆண்டுகளுக்குப் பிறகு.. அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு


      காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கான கோப்புகளில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் கையெழுத்திட்டதை தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் இன்று வெளியானது. கெடுவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அரசாணையை தாக்கல் செய்தது மத்திய அரசு.

         முன்னதாக, நேற்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து சட்ட அமைச்சகத்துடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
       நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரத்தை சட்டரீதியாக மட்டுமே அணுகுவது என்று மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அதனடிப்படையில் பணிகள் நடைபெற்றது.
         காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
       அரசாணையின் நகல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் அரசாணையின் நகல் வழங்கப்படும்.
அரசிதழில் வெளியானதால் ஏற்படும் பயன்கள்:
  • காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியானது தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் பலனளிக்கும்.
  • நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகி இருப்பதன் மூலம் காவிரி நதிநீர்ப் பங்கீடு, இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்படும்.
  • இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்த அமைப்பே நீரை பங்கிட்டு வழங்கும்.
  • இடைக்காலத் தீர்ப்பின்படி, 11 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்தின் பாசனத்திற்காக காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்த கர்நாடகாவுக்கு, இறுதித் தீர்ப்பின்படி 19 லட்சம் ஹெக்டேருக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
மத்திய நீர்வளத்துறை அதிகாரியின் தலைமையில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற்றுள்ளனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி ...தமிழகத்திற்கு 419 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்,கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும்,கேரளாவுக்கு 70 டிஎம்சி,புதுச்சேரிக்கு 30 டிஎம்சி தண்ணீரும் கிடைக்கும்.
இறுதித் தீர்ப்பு வெளியானதால், நீர் பங்கீடுகள் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிடும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive