Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரயில்வே பாதுகாப்பு: ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதி உதவி


         மத்திய அரசாங்கம் 2013- 2014 க்கான இரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

           இரயில்வே அமைச்சர் திரு. பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 1,52,000 காலி இடங்கள் நிரப்பப்படும் என்றும் 47,000 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

           மேலும், "இரயில் மின்னணுவியல் தொழில்நுட்பம் தொடர்பாக பல்வகை பயிற்சி நிலையம் நாக்பூரில் அமைக்கப்படும் என்றும் செகந்திராபாத்தில் மத்திய பயிற்சி நிலையம், இந்திய இரயில் நிதி மேலாண்மை நிறுவனத்தால் அமைக்கப்படும்" என்றும் அறிவித்தார்.

           மேலும், இரயில்வே சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., மாணவர்கள் 5 பேருக்கு தேசிய பல்கலைக்கழகங்களால் உதவித்தொகைகள் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive