Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கி கணக்கு துவக்குவதில் சிக்கல்: ஆதிதிராவிட மாணவர்கள் அவதி


      கட்டணமில்லா வங்கிக் கணக்கு துவக்க, பெரும்பாலான வங்கிகள் மறுத்து வருவதால், ஆதிதிராவிட மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.


         தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு, மத்திய மாநில அரசுகள், கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இக்கல்வி உதவித்தொகை, வங்கிக் கணக்கின் வழியாக மாணவ மாணவிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, ஆதிதிராவிடர் நலத்துறை கூறியது.

        ஆனால், வங்கி கணக்கை துவங்குவதற்கு உரிய சான்றிதழ்களுடன் சென்றாலும், வங்கி ஊழியர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிறுபான்மையின மாணவர்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன், கல்வி உதவித்தொகை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

         இதில், சுகாதார குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகையாக, ரூ.ஆயிரத்து 850ம், ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 500ம், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆயிரமும், சிறுபான்மையின மாணவர்களுக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆயிரமும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 2 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

         கடந்த, ஜூன் மாதம் நடந்த, தமிழ்நாடு மாநில பாங்க் குழும கூட்டத்தில், அனைத்து பாங்குகளுக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின, மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு, கட்டணமில்லா வங்கி கணக்கு துவங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

        ஆனால், மேற்கண்ட உத்தரவிற்கு விரோதமாக, தமிழகத்தின் பல்வேறு வங்கிகளில், ரூபாய், 100 முதல் 500 வரை பணம் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

         மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்பு சான்றிதழ் வழங்கினாலும் ரேசன் கார்டில் மாணவர்களின் பெயர் இல்லாவிடில் வங்கி கணக்கு துவங்க பாங்க் நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது.இந்நிலையில், வங்கி கணக்கு துவங்க விண்ணப்ப படிவங்களையும், உரிய ஆவணங்களையும் இணைத்து, தலைமை ஆசிரியர்கள் வங்கி மேலாளர்களிடம் ஒப்படைக்க சென்றாலும், பெற்றோர்கள் தான் கட்டாயம் வரவேண்டும் என, தினமும் அலைக்கழிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

         இதனால், வங்கிக் கணக்கு துவங்க பெரும் சிரமம் ஏற்படுவதுடன், காலதாமதமும் ஏற்படுவதாக மாணவர்கள், தெரிவித்தனர். ஆகவே மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க, அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

          இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்" என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive