Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசு

           நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, ஆதிதிராவிட மாணவருக்கு, நாளை பரிசு வழங்கப்படுகிறது.

             ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய, மூன்று பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியரில், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல், மூன்று இடங்களை பெறுபவருக்கு, முறையே, 50 ஆயிரம், 30 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய், பரிசாக வழங்கப்படும்.

                  அதே போல், பிளஸ் 2 தேர்வில், 25 பாடங்களில், முதல் இடங்களை பெறும், மூன்று பிரிவு மாணவருக்கும், ஒவ்வொரு பாடத்துக்கும், 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல், மூன்று இடங்களில் வருபவருக்கு, முறையே, 6,000, 4,000, 2,000 ரூபாய் வழங்கப்படும்.

             பத்தாம் வகுப்பு தேர்வில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பெறும், மூன்று பிரிவு மாணவருக்கு, முறையே, 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதே போல், ஒவ்வொரு பாடத்திலும், முதலிடம் பெறும், மூன்று பிரிவு மாணவருக்கும், ஒரு பாடத்துக்கு, 1,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

              இதன் மூலம், மாநில அளவில், 126 பேர்; மாவட்ட அளவில், 256 பேர் என, மொத்தம், 382 பேர் பயன் பெறுவர். ஆனால், பரிசுத் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

               இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, நாளை, தலைமை செயலகத்தில், அமைச்சர் சுப்ரமணியன் பரிசு வழங்குகிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive