NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு


          நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த 14.10.2012ல் எழுதினேன். எனக்கு ‘பி’ வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத பல கேள்விகள் கேட்கப்பட்டன.
 
             தேர்வாணைய வெப்சைட்டில் பதில்கள் வெளியிடப்பட்டன. இதில் 9 கேள்விக்கான பதில்கள் தவறாக உள்ளது. இதன் காரணமாக எனக்கு போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. 90 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. தவறான கேள்விக்கான மதிப்பெண்களை எனக்கு வழங்கினால் நான் 95 மதிப்பெண் பெற்று தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. எனவே தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

                 இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




13 Comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. சிங்கம் களம் இறங்கிவிட்டது

    ReplyDelete
  3. Friend nan sonna karuthukku ungal karuthu enna?

    ReplyDelete
  4. Gowrisankar.m ,eppadieye kes pottukittu irunthale pothum aandugal kadanthu atchium maridum

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. Past is past palya tet exama ippam ethuku kelaruranga. it is too much.

    ReplyDelete
  8. am vinoth from tanjore district..... hi surya may i know which questions are wrong and came from out of syllabus pl mention it

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. next TET exam la itha vida nalla prepare panni nalla mark score pannalam. matriculation teachers TET Apr 2016 pass ahakanumnu chollirukanga.Athunala next TET exam eppa vaikuranganu result vanthathuku appuram announce pannuna nalla irukum

    ReplyDelete
  11. Tet result eppaya varum sollidinganne?

    ReplyDelete
  12. ஒரு மதிப்பெண் ஆசிரியரின் வாழ்கையை பாதிக்கின்றது.விடையை தேர்வுசெய்துவிட்டு கேள்வியை குளறுபடி செய்கிறது TRB .ஒரு சில மதிபெண்ணில் எதிர்காlலமே கேள்விகுரியதாக்குகிறது TRB.ஒரு வாரம் காலஅவகாசம் கொடுத்தோம் என்கிறார்கள். உண்மையில் அந்த காலஅவகாசம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களை சார்ந்தவர்களுக்கு பயனடையும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளவே இந்த அவகாசம். உதாரணமாக தொழிகங்களை இயக்கும் உயிர்நாடி எரிசக்தி [+1 புத்தகம்]என்பதுதான் சரியானவிடை . ஆனால் கூடுதல் விடையாக மூலதனம் என அறிவித்துள்ளது TRB.ஒரு தொழிற்சாலை அமைவிட காரணிகள் மூலதனம் ,பணியாட்கள் ,மூலபொருள் ,போக்குவரத்து போன்றவை என புத்தகத்தில் உள்ளபடி .இப்படி அமைந்த தொழிற்சாலைக்கு உயிர்நாடி எரிபொருள் மட்டும்தான். இப்படி யாருக்காக கூடுதல் விடைகள அளித்தீர்கள். அதுபோல் கிமு ஆறாம் நூறாண்டுக்கு பின் செல்வாக்கு பெற்ற மதம் வேத வைதீக வருணாசிரம மதம். ஆனால் புத்தமதம் என்று ஏன் இணைத்துள்ளீர்கள் .அப்போது செல்வாக்கு இருந்தால் விடையை மாற்றிவிடலாம் . மாணவன் கேள்விகேட்டால் ஆசிரியர் சரியான பதில் மட்டும் தான் தரவேண்டும் .அதுமட்டுமல்ல இதுவும் என கூறினால் மாணவன் சிரிப்பான் .தமிழில் எழுத்து பிழையோடு எழுதி இருந்தால் நல்ல ஆசிரியர் அதை அடித்துவிடுவார்கள். கிண்ணர மிதுனம் என்றால் பறவை என்று விடை இல்லை .ஒரு இசை கருவி /இராசி . காதார்சிஸ் என்று கேட்டால் தமிழில் படித்தவன் எப்படி எழுதுவான்.அறிவுசார் வளர்ச்சி கோட்பாடு குழந்தையின் எந்தபன்புகளை முக்கியதுவபடுத்துகிறது என்பதற்கு முதிர்ச்சி என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது .முதிர்ச்சி என்பது ஒழுக்கம் மற்றும் சமூக சார்புடைமை உள்ளடக்கியதே.மாணவர் தனது சொந்த பிரச்சினையுடன் அணுகினால் உங்களது அடிப்படை செயல்பாடு எதுவாக இருக்கும். என்பதற்கு கொடுக்க பட்ட விடைகள் எதுவும் சரியானது இல்லை.பிரச்சினையின் காரணத்தை பகுத்தாய்தல் செய்வதற்கு முன் அந்த மாணவருடன் மனநெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். ஏன் என்றால் அந்த மாணவன் உள தடுமாற்றம் ,மனரீதியான பாதிப்பு போன்றவைகளால் பாதிக்க பட்டு இருக்கிறானா என்று அறிவது மட்டுமல்ல . இது அனைத்து பழைய ஆதார உளவியல் நூல்களிலும் இருக்கிறது .தவறு என தெரிந்தும் சரி செய்யாத TRB க்கும் வல்லுநர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் பாதிப்பு அடைந்தவர்கள் TRB க்கு மனமார பாராட்டுகளை தெரிவித்து கொண்டு TET தேர்வு எழுதிக்கொண்டே இருங்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive