NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி

           நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர்,   தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

             பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்க விருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய, 'தி புரோபெசீஸ்' என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார். இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555ல் வெளியாகியுள்ளன. இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

                 இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில், 21ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பிரெஞ்சு புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




13 Comments:

  1. மீண்டும் வென்றது சமூகநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)

    உதாரணம்

    :+2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்
    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%

    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)மொத்தம் = 72.5/100

    ReplyDelete
  2. Is this true?

    ReplyDelete
  3. Hi everyone, this is not a correct method to select a teacher. Since in my school days, i had not got enough environment to study and score good marks in exams, even did not have teachers for 4 subjects, and we were not knowing about entrance exam for B.E and M. B. B. S. Now, I have completed M.Sc., B.Ed., M.Phil. and pursuing my research in mathematics. So, you have to check current knowledge and their interest and dedication. Even, when I joined M. Sc., mathematics, I did not know meaning for the word "we know that", now I have grown up in all sense...what is your answer in my case... I am not suitable for a teacher..... if I not can you tell me the right person to be a teacher....

    ReplyDelete
    Replies
    1. Sir .. if you need to be a teacher..u enhance ur english first

      Delete
  4. நல்ல கற்பனை..

    ReplyDelete
  5. Ithe mathiri katha udunga nalla velangum

    ReplyDelete
  6. அடுத்த pm யார் னுகூட தெரியுமே

    ReplyDelete
  7. //பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ்// இவர் யாருடைய பெயரை குறிப்பிட்டு சொன்னதில்லை. கேட்கிறவன் கேனையன இருந்தா சொல்லுகிறவன் கேப்பையில் நெய் வடிகிறது என்பான்.

    ReplyDelete
  8. Ithulayum yen pa TET pathi comment kudukuringa... nimmathiya vera ethaum padikka vida matingala...

    ReplyDelete
  9. எங்க எந்த comment கொடுக்கனுமோ அங்க அந்த comment கொடுங்கப்பா!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. 400 ஆண்டுகளுக்கு முன்னாடி பா.ஜ.க என்ற கட்சியே இல்லையே.அப்புறம் எப்பிடி ? ஒரு வேளை எலக்ட்ரானிக் வோட்டிங் மிசின் பற்றி கூட சொல்லி இருப்பாங்களோ, இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை. எலக்சன் செலசு மிச்சமாயிருக்குமே. சரி போனது போகட்டும். பாகிஸ்தானுடன் எப்போது சுமூக உறவு ஏற்படும். இதெல்லாம் இருக்காது என்பதுதான் உண்மை. நம்புங்கள் ஓரளவுக்கு ,நிறைய யோசிங்கள்.நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive