Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்!

           மாணவர்களுக்கான வகுப்பறை வேலை நாட்கள் என அரசு அறிவித்து அது கையேடாகவும், நாட்காட்டியாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 
           அதன்படியே வகுப்புகள், தேர்வுகள் நடைபெற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பாடத்தையும் முன் கூட்டியே பயிற்றுவிக்கக் கூடாது என்றும் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புப் பாடப் புத்தகங்களைத் தான் கற்பிக்க வேண்டுமெனவும் ஆணை பிறப்பித்துள்ளது அரசு.
 
         இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு இன்னமும் ஆரம்பிக்காத போது, இப்போதே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75% சதவீத பாடங்கள் முடிக்கப்பட்டுவிட்டன. மாணவ மாணவியர் சர்வ சாதாரணமாக பள்ளி சீருடையில் கோடை விடுமுறை நாட்களில் இப்போது பள்ளிக்கு சென்று வருகின்றனர். இது சரியா? இதை அரசும் ஊக்குவிக்கிறதா? அல்லது அதிகாரிகள் தெரியாதது போல் இருக்கிறார்களா என்று புரியவில்லை.
 
           ஒரு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களில் மட்டும் பயிற்றுவித்து மாணவர்களின் திறனை சோதிக்காமல்,கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடம் நடத்தி, சிறு சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை அதுவும் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்து தேர்ச்சி சதவீதத்தை கூறி தம்பட்டமடித்துக் கொள்வது கோமாளித்தனம் மட்டுமன்றி வேறென்ன?
 
             இதையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்ய இயலுமா? விடுமுறை நாளில் ஒரு நாள் சிறப்பு வகுப்பு எடுத்தாலும் குற்றமாக கருதப்படும்.ஆசிரியர்கள் வந்து காத்திருந்தாலும் மாணவ்ர்கள் வருவது இல்லை.பெற்றோரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. இவ்வளவிற்கும் தனியார் பள்ளிகளைப் போல இல்லாமல் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஓராண்டே பாடம் நடத்தப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் வரவில்லை என்றாலும் கண்டிக்க முடியவில்லை. நிறைய மாணவர்கள் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கூட பள்ளிக்கே வராமல் நேராக அரசுப் பொது தேர்விற்கு செல்லும் அவலமும் தொடர்கிறது. இதையெல்லாம் தனியார் பள்ளிகளில் அனுமதிப்பார்களா?
 
               அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு....
 
           இன்னமும் நாங்கள் தனியார் பள்ளிகள் ஒதுக்கித் தள்ளுகிற ஏழை மாணவர்களுக்குத் தான் கற்பிக்கிறோம். அவர்களது குடும்ப சூழலையும், பொருளாதார சூழலையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கே வரமாட்டேன், கூலி வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும்,செங்கல் சூளை வேலைக்கும் தான் செல்வேன் என அடம்பிடிக்கிற மாணவர்களை, பள்ளிகளுக்கு பெரும்பாலான நாட்கள் வருகை தராத மாணவர்களைத் தான் நாங்கள் முடிந்த அளவிற்கு பயிற்சி அளித்து அரசுத் தேர்வுக்கு அனுப்புகிறோம்.
குறைவான அளவே, அவர்களால் படிக்க முடிந்த அளவு எழுத முடிந்த அளவு கொடுத்து, அவர்களை எங்கள் செலவில் நிறைய நோட்டு,பேனா, ஃஸெராக்ஸ், கையேடுகள் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் அளித்து ஊக்குவித்து கிடைக்கிற வகுப்பறைகளையும், மரத்தடிகளையும் பயன்படுத்தி படிக்க வைக்கிறோம்.
 
               கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 75 சதவீத அளவிற்கு ஆசிரியர்கள் மாநில அளவிலான தகுதித்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அரசுப் பள்ளிகள் என்றாலே ஆசிரியர்கள் தரமில்லை என ஒட்டுமொத்தமாக் கூறுவதை நிறுத்துங்கள். அந்தக் கூற்று இப்போது ஆர்வத்தோடும், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் பணியாற்றக் கூடிய பெரும்பாலான இளைய ஆசிரிய சமுதாயத்தின் மனதை வலிக்கச் செய்யும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் எனில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்கள் உதவியை நாடி வருவது ஏன்? ட்யூஷன் எடுக்க மாட்டேன் என சொன்னாலும் இலவசமாக வீட்டிற்கு வந்து உதவியைப் பெறும் மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
 
           சரி அதை விடுங்கள். எத்தனை தனியார் பள்ளிகள் அரசு ஆசிரியர்களை, அல்லது ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களை தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அழைக்கிறார்கள் தெரியுமா?
 
             ஒரு மணி நேரம் பயிற்சி அளித்தால் 3000 ரூபாய் வரை அளிப்பதாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களின் தனியார் பள்ளிகள் என்னை அணுகின. நான் ஒரு போதும் அதைச் செய்வது இல்லை. அன்போடு மனம் நோகாதவாறு தவிர்த்துவிடுவேன்.
 
பெருமைக்காகச் சொல்லவில்லை.
 
              நான் மட்டுமல்ல.இன்னும் திறமையான நிறைய அரசு ஆசிரியர்கள் இந்தத் தவறை செய்வதில்லை. எனக்கு அரசு சம்பளம் தருகிறது என்பதை விட என் மாணவர்கள் எனக்கு சம்பளம் தருகிறார்கள் என்ற எண்ணமே இன்று பெரும்பாலான அரசு ஆசிரியர்களின் மனதில் வேறூன்றிவிட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இப்போது தகுதித் தேர்வு வைத்தாலும் வெல்லப் போவது அரசுப் பள்ளி ஆசிரியர்களே. படித்தலும், புதுப்பித்துக் கொள்வதும், "மாநில அளவிலான போட்டித் தேர்வில்" வெற்றி பெறுவதும் அவர்களுக்குப் புதிதல்ல.
திறமை தனியாரிடம் தான் இருக்கிறது எனக் கூவும் நண்பர்கள் அவர்களை போட்டித் தேர்வு எழுதச் சொல்லி அரசுப் பணிக்குச் செல்ல ஆலோசனை சொல்லுங்களேன்.
 
           ஒரு மாற்றதிற்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒரு வாரம் அரசுப் பள்ளிகளில் பணியாற்றச் சொல்லுங்களேன். நாங்கள் அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று 'சகல' வசதிகளோடு பணியாற்றி வருகிறோம். அதற்கான சம்பளத்தையும் கொடுத்து விடுகிறோம்.
 
           ஏன் இவ்வளவு தைரியமாக சொல்கிறேன் என்றால், இன்றைக்கு சிறப்பு தகுதி உள்ள அத்தனை ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி விட்டு வந்தவர்கள் தான். ஆனால் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பாதியிலே விட்டுவிட்டு தனியார் பள்ளிகளில் பணியாற்றுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
 
                அரசுப் பள்ளி மாணவர்கள் அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். தனியார் பள்ளிகளைப் போல தண்டனை, தண்டம் கட்டுதல், பெற்றோரை அழைத்து வரச் சொல்லி மிரட்டுதல், சரியாகப் படிக்காவிட்டால் நீக்குதல் என்ற மனிதாபிமானமற்ற அராஜகங்களை இங்கே செயல்படுத்துவதில்லை.
 
              சுருக்கமாகச் சொன்னால் அரசுப் பள்ளிகள், எந்திரங்களை உருவாக்குவதில்லை. அப்துல்கலாமைப் போல், மயில்சாமி அண்ணாதுரை அவர்களைப் போல் மாண்புமிக்க சமுதாயம் போற்றும் மனிதர்களை மட்டுமே உருவாக்குகிறது




40 Comments:

  1. 100% true sir u r exactly correct

    ReplyDelete
  2. super article..

    ReplyDelete
  3. Evalo pesringla unga pasangali govt school padika vagrathu ran parivate school padikiranga enniku state first student parents govt school teacher ana ponnu padikirathu private schools ponga sir ubga poiya namba tharaya ella

    ReplyDelete
  4. Excellent Article sabash!!!

    ReplyDelete
  5. மிக அருமையான கருத்துக்கள்..

    ReplyDelete
  6. Super super

    ReplyDelete
  7. மிக அருமையான கருத்துக்கள். நன்றி,,,,,
    By sankar

    ReplyDelete
  8. u r right mam, i also know so many private schools comleted the 10 & 12 portions now it self, and they give admission to the students who scored above 450 and 1000 , making the expert students to get more marks is not a matter at all, it is our challenge, are they ready to give admission to the poor students, can they make them get more marks, it is an open challenge, at the same time we should not blame all private schools, only few schools are doing like this, and they proudly announce the names of the students who scored more ,why not they announce about the total percentage of pass. making the poor and average students to get atleast pass mark is a NOBLE Work. So we respect and understand the Govn. school trs. We salute u all.

    ReplyDelete
  9. Mam 100% true
    so only private school score high mark... Govt stop this orelse govt school 2year teach so they get highest mark...

    ReplyDelete
  10. இன்றைய தமிழக கல்வி நிலையினை அருமையாக சொன்னீா்கள்.... அதோடு மட்டுமின்ற சில பெற்றோா்கள் தங்கள் குழுந்தை தனியாா் பள்ளியில் படித்தால்தான் பெருமை என்ற தவறான நோக்கமும் கொண்டு உள்ளனா். இதனால் தான் அரசு பள்ளிகளின் தோ்ச்சி சதவீதம் குறைகின்றது. இந்த நிலை மாற என்ன நடவடிக்கை எடுக்க வெண்டும்.. யோசியுங்கள் நண்பா்களே........

    ReplyDelete
  11. excellent article

    ReplyDelete
  12. urakka sollungal arasu asiriyarkalin paniyai ulagam ariyattum

    ReplyDelete
  13. urakka sollungal arasu asiriyarkalin paniyai ulagam ariyattum
    by anbuthangam

    ReplyDelete
  14. well said teacher.

    ReplyDelete
  15. மிகவும் சரியான விடயத்தை கூறினிர்கள். நானும் கூட இதுபோன்று மாணவர்கள் பள்ளிப்பேருந்துகளில் செல்வதை பார்க்க முடிகிறது. அரசு அதிகாரிகளும் கூட இதற்கு உடந்தையாக இருக்க தான் கூடும் இல்லையென்றால் இது சாத்தியமா?

    ReplyDelete
  16. Sir ella private schoolum eppadithan nadakirarkal enga vurla lkg admissionku traffic jam akidichi state first varuvatharku lkg la iruthe train pannurangalam theriuma ippo next tenth result vanthavudan vanthu parungal tamilnadu la irukira ella carum enga vurlathan irukum vudane exam vachi batch prichiducangaadhukethemathiri train pannuvanga

    ReplyDelete
  17. இது என்ன அதிசயம்னா, நாமக்கல்,ஈரோடு,பவானி, போன்ற பொன்முட்டை போடும் 11ஆம் வகுப்புக்கென்றெ உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இயக்குனர்கள், இனைஇயக்குனர்கள்,துனைஇய்க்குனர்கள், மு.க.அ,மா.வ.க, பங்களிப்புடன் ஆதரவுடன் பார்டன்ர்ஷிப்புடன் தான் நடக்கிறது தெரியுமா?

    ReplyDelete
  18. ஹரிஹரன்.சி5/11/2014 2:23 pm

    அரசுப்பள்ளிகள் மீது அக்கறை கொள்பவர்களாக தங்களைப் பற்றித்தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் ”அரசுப்பள்ளி மாணவர்கள் ஏழைகள் என்றும்,ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளி -அரசுப்பள்ளி என்றும் ” கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்..... மேற்சொன்னவாறு கூறுவதனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கூட அரசுப்பள்ளியில் ஏழைகள் மட்டுமே படிப்பர் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்.அப்படியிருக்க தனவான்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?...... அரசுப்பள்ளிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆசிரியர் மே மாதம் பள்ளிக்குச் சென்று மாணவர் சேர்க்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்....

    ReplyDelete
  19. Thirunavukkarasu5/11/2014 2:24 pm

    Etherku eduthalum govt schoola kutram soldravanga first itha padinga

    ReplyDelete
  20. ஹரிஹரன்.சி5/11/2014 2:35 pm

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. நிஜத்தின் நிழல் உண்மையின் உறைகல் சத்தியத்தின் சவுக்கடி சாதனையாளனின் கை காட்டி இப்படிக்கு முன்னாள் மெட்ரிக் பள்ளி - இன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். SRITHAR R B.T.Asst., (MATHS) GBHSS ULUNDURPET 9994384370

    ReplyDelete
  22. அன்பானவர்களே!
    இன்னும்கூட சில விசங்களை பகிர்ந்து கொள்ளலாம். அரசு மாணவர்களை கண்டிக்க முடியாது. பெற்றோர், அடித்து ப்டிக்கவைங்க என்பார்கள்.அதை நம்பி அடித்த ஆசிரியர்கள் நிலை காவல்நிலையம், வழக்கு, தற்காலிக பணிநீக்கம். ஆனால் தனியார் பள்ளியில் எளிமையாக ஒரே வார்த்தை, காலாண்டில் பெயில் ஆனால் தனித்தேர்வராகத்தான் தேர்வு எழுதுவான் சம்மதம் இல்லை என்றால் வேறு பள்ளிக்கு அழைத்துச்சென்றுவிடுங்கள் அல்லது நாங்களே டி.சி.கொடுத்துவிடுவோம். இந்த மிரட்டலைக் கேட்டும் பணிவுடன் செல்லும் பெற்றோர்தான் அதிகம். அரசு பள்ளி மாணவர்கள் செல்லக்குழந்தைகள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தியாகிகளே.தனியார் பள்ளி ஆசிரியர்களும் தியாகிகள்தான். ஆனால் என்ன நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்யவேண்டும்.

    ReplyDelete
  23. ரொம்ப நன்றி சார். ஒரு பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள், அரசு ஆசிரியர்களை விட தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு. ஆனால் தேர்ச்சி சதவீதம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள். நீங்கள் கூறிய இந்த கருத்து அவர்களூக்கு போய் சேர வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு அரசு ஆசிரியர்களின் நிலைமை என்னவென்று தெரியும்.

    ReplyDelete
  24. First government teachers ellam unga pasangala gvt schoola padika vakkaringala?

    ReplyDelete
  25. மிக அருமையான், உண்மையான கருத்து .தற்போது அரசுப் பள்ளியில் பணிபுரியும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தனியார் ப ள்ளியில் பணியாற்றியவர்கள் தான். தனியார்களின் விளம்பரத்தைக் கண்டு ஆட்டு மந்தைகள் போல் விழுபவர்கள் என்று திருந்துவார்களோ?

    ReplyDelete
  26. Excellent article

    ReplyDelete
  27. அரசு பள்ளி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த உள்ளக் குமுரல்களை தாங்கள் மூலமாக வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி இன்னும் நிறைய உள்ளன அலுவலக பணிச்சுமையும் ஆசியர்கள் பகிர்ந்துகொண்டு பணியாற்றிவருவது இன்னும் பல இன்னல்களுக்கு இடையே தலைமைஆசிரியர் மற்றும்ஆசிரிய சமுதாயம் பணியாற்றி வருகிறார்கள் அரசுக்கு நம் கருத்களை எடுத்து செல்ல பாடசாலை நேசக்கரம் நீட்டுங்கள்

    ReplyDelete
  28. Anyone willing to comment on this article may try and do. The author focusses only on the unlawful actions of private institutions. The author does not blame the private schools for other activities. The real picture of quality can be got only when those schools follow government norms correctly. I appreciate the author. It does mot matter where a student studies. It matters only how the students are given the education in the right manner

    ReplyDelete
  29. its full of truth very nice article super fantastic

    ReplyDelete
  30. It's wonderful article but the govt teacher must have rights to the students.the govt take an importance steps about students.once we bring the discipline among our school our school only going to get first mark

    ReplyDelete
  31. எல்லா விபரமும் எல்லோருக்கும் தெரியும் தெரியும் ஆனா தெரியாது 99%அரசு பள்ளி ஆசிரியர்களும் உயர் அதிகாரிகளும் தனியார் பள்ளியில் பணி புரிநதவர்கள் தான்

    ReplyDelete
  32. REALLY SUPER...AND 100%REAL...IF THE GOVT ALLOWS THE GOVT SCHOOL TEACHERS TO PRACTICE THE 10 & 12 TH LESSONS FOR 2 YEARS [AS THE PRIVATE SCHOOLS DO] WE WILL ALSO PRODUCE MANY STATE RANKERS...TOP RANKERS..THIS IS NOT A MAGIC THEY ONLY CAN DO..THEY DONT HAVE ANY SUPERPOWER...OR DONT THINK THAT THEY ARE GIVING EXTRAORDINARY EFFORT TO GET THE RESULT...OK...

    ReplyDelete
  33. very good sir.your statement is 100% correct

    ReplyDelete
  34. very good sir.ur statement is 100% correct.

    ReplyDelete
  35. Good article.private school 1st rank student is not equal to last rank govt school students in knowledge. Because they are only xerox mechine

    ReplyDelete
  36. இந்த நிலை மாற என்ன நடவடிக்கை எடுக்க வெண்டும்.. யோசியுங்கள்?
    Let all govt Teachers put their wards in to govt.school and set example for the public to believe

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive