Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே நாளில் 'நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்: குழப்பத்தில் பட்டதாரிகள்

           'நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது'  என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர். கல்லூரி விரிவுரையாளர்களுக்கான, மத்திய அரசின், தேசிய தகுதித்தேர்வு ('நெட்'-நேஷனல்எலிஜிபிலிட்டி டெஸ்ட்) ஜூன் 29ல் நடக்கிறது. அன்று, தமிழக அரசின் 'குரூப் 2' தேர்வும்நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும், தமிழகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

             இதுகுறித்து, தேனியை சேர்ந்த அசோகன்கூறுகையில், ''நாங்கள் 50 பட்டதாரிகள் இணைந்து, தேனி ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து, போட்டி தேர்வுக்கு படித்து வருகிறோம். இரண்டு தேர்விலும் பங்கேற்க வேண்டும், என்பது எங்கள் விருப்பம்.ஆனால், மத்திய அரசின் தேர்வு நாடு முழுவதும் நடப்பதால், தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை. 'குரூப் 2'தேர்வு தேதியை, தமிழக அரசு மாற்றி அமைத்தால், பட்டதாரிகள் பயனடைவர்,'' என்றார்.




2 Comments:

  1. TAMILSELVI G.5/07/2014 5:45 pm

    group 2 exam will be on June 29th not July 29th

    ReplyDelete
  2. viruppamanathai poi eluthunga...... Summa.......

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive