Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5.50 லட்சம் லேப் - டாப் கொள்முதல்: பணியை விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு

            மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்க, 5.50 லட்சம் 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
          கடந்த, 2011 - 12ல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், 8.67 லட்சம் மாணவர்களுக்கு, இலவச, 'லேப்-டாப்'கள் வழங்கப்பட்டன. அடுத்து, 2012 - 13ல், 7.18 லட்சம்; 2013-14ல், 5.30 லட்சம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுவரை, 21.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக, 2,781.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டும், அடுத்த ஆண்டும், தலா 5.50 லட்சம், 'லேப்- டாப்'கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.நடப்பாண்டுக்கு, 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 5.50 லட்சம், 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி, எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டப் பணி குறித்து, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது, கொள்முதல் பணியை விரைவாக முடித்து, விரைவாக மாணவர்களுக்கு, 'லேப்-டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப செயலர் ராமச்சந்திரன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive