NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல்கலை மாணவர்களுக்கு பாடம் எடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்!

        கழிவுப் பொருட்களை கலை நயமிக்க பொருட்களாக மாற்றுவது எப்படி என, பொறியியல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர்.
          கல்லிலே கலை வண்ணம் கண்டாய் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல், கற்கலை செதுக்கி அழகிய சிலைகள் உருவாகி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், வேண்டாம் என்று குப்பையில் துாக்கி விசும் கழிவு பொருட்களை, கலை பொருட்களாக மாற்றி வருகின்றனர் சேலியமேடு அரசு பள்ளி மாணவர்கள்.

புதுச்சேரியின் கடைகோடி ஓரத்தில் உள்ள சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் 30 மாணவர்கள், ஆசிரியர் துணையுடன், கிராமப்பகுதியில் அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்தும் பனை, தென்னை ஓலைகளை கொண்டு பல்வேறு விதமான வியக்கதக்க கலை பொருட்களை செய்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
அழிவின் உயிர்ப்பு என்ற தலைப்பில், பள்ளி மாணவர்கள், ஒரு அடி முதல் 12 அடி உயரம் வரை, விநாயகர், பாய்மர கப்பல், சைக்கிள், விலங்குகள் உருவாக்கியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு, 9ம் மாணவர்கள் பயிற்சி
இப்பள்ளி மாணவர்கள், தேங்காய்த்திட்டு பச்சையப்பன் சிறப்பு பள்ளி, பிள்ளையார்குப்பம் எஸ்.ஓ.எஸ்., குழந்தைகள் கிராமம், கரூர் செட்டிநாடு வித்யாஸ்ரமம், கள்ளக்குறிச்சி சக்தி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் பயிற்சி கொடுத்துள்ளனர். பயிற்சி முடித்து பிளஸ் 2 மாணவன் தமிழ்ச்செல்வம், கழிவு பொருட்கள் மேலாண்மை என்ற தலைப்பில் திருச்சி கேர் ஆர்க்கிடெக் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.
9ம் வகுப்பு மாணவர்கள் ராகேஷ், மகேஸ்வரன், ராகுல்காந்தி, முருகன் ஆகியோர் இதயா கல்வியியல் கல்லுாரியிலும், சென்னை சத்யபாமா பல்கலைக்கழக கட்டட துறை மாணவர்களுக்கு 9ம் வகுப்பு மாணவர் ராகேஷ் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் தமிழ்ச்செல்வன், கபிலன், ராகேஷ் ஆகியோர் புதுச்சேரி பல்கலைக்கழக மாசுகட்டுப்பாட்டுத் துறை மாணவர்களுக்கும், பயிற்சி அளித்து அசத்தியுள்ளனர்.
நுண்கலை ஆசிரியர் உமாபதி கூறுகையில், "கிராமப்புறத்தில் அதிக செலவு இன்றி, கிடைக்கும் பொருட்களை வைத்து கலை பொருட்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியபோது, மாணவர்கள் பனை, தென்னை குருத்து, ஓலைகளை கொண்டு வந்து, விநாயகர் உருவம், யானை, மனிதர் என விவரித்தது ஆச்சர்யத்தை ஏர்படுத்தியது. மாணவர்கள் தற்போது, என்னை மிஞ்சி, அவர்களாகவே, கலை பொருட்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர்.
பார்க்கும் பொருட்களை எல்லாம் கலை பொருட்களாக மாற்றி வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்கள் அனைவரின், ஒத்துழைப்பால் இம்மாணவர்கள் இக்கலையில் சிறந்து விளங்கி வருகின்றனர். மாணவர்களின் பயிற்சியை கண்ட, இரண்டு ஆர்க்கிடெக் கல்லுாரிகள், 2 மாணவர்களுக்கு எந்தவித கட்டணம் இன்றி, பயில இப்பொழுதே உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive