இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும், இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்கும் இடையே கப்பல் போக்கு வரத்தை மீண்டும் துவக்குவதற்கான பேச்சு, 13 - 14ம் தேதி, இலங்கையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான முயற்சிகளில், 'இர்கான் இந்தியா' என்ற, மத்திய அரசின், இந்திய ரயில் கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும். ஏற்கனவே, இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் இடையே ரயில் போக்குவரத்திற்கான பணிகளில், இர்கான் இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கப்பல்கள் இயக்கப்படுவதற்காக, மரத்தாலான கட்டுமானம் அமைக்கப்படும். அது போல, ராமேஸ்வரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, தமிழக அரசு அல்லது தமிழக அரசின் உத்தரவின் படி, தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். இதற்கிடையே, தூத்துக்குடி - கொழும்பு இடையே படகு போக்கு வரத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, இந்திய கப்பல் போக்குவரத்து துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
TET Study Materials
Home »
» ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து
ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து
இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும், இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்கும் இடையே கப்பல் போக்கு வரத்தை மீண்டும் துவக்குவதற்கான பேச்சு, 13 - 14ம் தேதி, இலங்கையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான முயற்சிகளில், 'இர்கான் இந்தியா' என்ற, மத்திய அரசின், இந்திய ரயில் கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும். ஏற்கனவே, இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் இடையே ரயில் போக்குவரத்திற்கான பணிகளில், இர்கான் இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கப்பல்கள் இயக்கப்படுவதற்காக, மரத்தாலான கட்டுமானம் அமைக்கப்படும். அது போல, ராமேஸ்வரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, தமிழக அரசு அல்லது தமிழக அரசின் உத்தரவின் படி, தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். இதற்கிடையே, தூத்துக்குடி - கொழும்பு இடையே படகு போக்கு வரத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, இந்திய கப்பல் போக்குவரத்து துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...