Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு அலுவலகங்களில் ஜி மெயில் போன்ற தனியார் இ-மெயில்களை பயன்படுத்த தடை

         மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  
          இந்திய அரசின் இ-மெயில் கொள்கை என்று பெயரிடப்பட்ட அந்த நோட்டீசில், நாட்டின் தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படி, அரசு தொடர்பான எந்த ஒரு தொடர்புகளையும் 'நிக்' வழங்கும் இ-மெயில் சேவையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு நிறுவனங்களின் கணிணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தனியார் இ-மெயில்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்றவற்றின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளதால், அதை பயன்படுத்தி அமெரிக்க அரசு இந்திய அரசின் செயல்பாடுகளை வேவு பார்த்தது. இந்த வேவு பார்த்தலை தடுக்கவே தனியார் இ-மெயில்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே போல் அரசு தகவல் தொடர்பு நெட்வொர்க்கை பயன்படுத்தி, சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் மிரட்டல், வெறுப்பேற்றுதல், ஆபாசம், அத்துமீறல் போன்ற கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்கும் பொருட்டும் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive