Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பீகார் : ஆசிரியர் தகுதிதேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வ

பாட்னா: பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3
ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணி
நீக்கம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து
மாநில கல்வித்துறை அதிகாரி
கூறியதாவது: மாநிலத்தில் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும்
என மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பி்த்தது.
இதனடிப்படையி்ல் ஆசிரியர்களுக்கு
இருமுறை தேர்வு நடத்தப்பட்டது.
முதல்முறை தோல்வியடைந்த போதிலும்
இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் இரண்டுமுறையிலும் சுமார் 3
ஆசிரியர்கள் வரை தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும்
பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என
தெரிவித்தார். மாநிலத்தில் கடந்த 2008-ம்
ஆண்டு முதல் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு
வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட
தேர்வில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தபணி
வகித்து வந்த ஆசிரியர்கள் தோல்வி கண்டனர்
என்பது குறி்ப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive