NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

25 மரக் கன்றுகளை நட்டால் பி.இ. சேர்க்கையில் 1மதிப்பெண்: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் விநோதம்.

          புவி வெப்பமயமாதல் பாதிப்பை குறைக்கும் வகையில், மக்கள்நலக் கூட்டணி விநோதமான அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
 
          அதன்படி, 25 மரக் கன்றுகள் நட்டிருக்கும் விண்ணப்பதாரருக்கு பி.இ. சேர்க்கையில் 1 மதிப்பெண் வழங்கப்படும் என்பதாகும்.

இதுகுறித்து வைகோ கூறியது:


மரங்கள் தொடர்ந்து அழிப்புக்கு காரணமாக, பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டே வருவது பேராபத்தில்தான் முடியும். நாயக்க மன்னர்கள் காலத்தில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு, பராமரித்து பாதுகாத்தல் என்பது அரசின் கடமையாக இருந்தது.அதுபோல, மரக் கன்றுகள் நடுவதை ஊக்குவிப்பதற்கான ஆக்கப்பூர்வமான ஒரு திட்டத்தை மக்கள் நலக் கூட்டணி முன்வைக்கிறது.பள்ளி, கல்லூரிகளில் குறிப்பாக தொழில்முறை கல்வி படிப்பில் சேர்க்கும்போதும், வேலைவாய்ப்புக்கு நேர்காணல் நடத்தும்போதும் விண்ணப்பதாரர்களின் குடும்பத்தினர் 25 மரக்கன்றுகள் நட்டிருந்தால் ஒரு மதிப்பெண் என்றும், 50 மரக் கன்றுகள் நட்டிருந்தால் 2 மதிப்பெண் என்றும், 100 மரக் கன்றுகள் நட்டிருந்தால் 3 மதிப்பெண் என்றும் வழங்கப்படும்.

இதில் மரக் கன்று நடாமலே பொய்யான தகவல் அளிப்போருக்கு 5 மதிப்பெண் குறைக்கப்படும். தமிழகத்தை பசுமை வளம் செழிக்கும் மண்ணாக மாற்றிட "மரம் நடுதல் பேரியக்கத்தை' மக்கள் நலக் கூட்டணி அறிவிக்கிறது என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive