NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

            நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது.
நேர்காணலுக்கு தற்காலிகமாக 65 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த சான்றிதழ் விவரங்களை சரிபார்க்க தற்போது அழைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு மே 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது. இவர்களுக்கான அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இந்த இரு நாட்களில் பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு தேர்வாணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive