Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூன் 2020-க்கு பிறகு பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு நிறுத்தம்

"பாரத் ஸ்டேஜ்-4' (பி.எஸ்.-4) என்ற மாசுக் கட்டுப்பாடு தரத்துடன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள், வரும் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகுப் பதிவு செய்யப்பட மாட்டாது.

அதற்காக, மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவுள்ளது.
வாகனப் புகையால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக, பி.எஸ்.-4 மாசுக் கட்டுப்பாட்டுத் தரத்தில் இருந்து நேரடியாக, பி.எஸ்.-6 மாசுக் கட்டுப்பாட்டுத் தரத்துக்கு மாறுவற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதற்காக, புதிய வரைவுக் கொள்கை ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பி.எஸ்.-4 மாசுக் கட்டுப்பாட்டு தரத்துடன் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களை, 2020-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகுப் பதிவு செய்ய முடியாது.
இதேபோல், பி.எஸ்.-4 மாசுக் கட்டுப்பாட்டு தரத்துடன் பயணிகளை அழைத்துச் செல்லும் 4 சக்கர வாகனங்கள், சரக்குகளைக் கொண்டு செல்லும் 4 வாகனங்கள் ஆகியவற்றை 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகுப் பதிவு செய்ய முடியாது.
இதுதொடர்பான கருத்துகளை சம்பந்தப்பட்டவர்களும், பொதுமக்களும், வரும் 20-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படும் என்று அந்த வரைவுக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இந்த வரைவுக் கொள்கை, 1998-ஆம் ஆண்டைய மோட்டார் வாகனச் சட்டத்துடன் இணைக்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive