NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிச.8ல் மதுரையில் 'ஜாக்டோ -ஜியோ' கூட்டம்

ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழுக்கூட்டம் மதுரையில் டிச., 8 ம் தேதி நடக்க உள்ளதாக உயர் மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவும், புதிய ஊதியக்குழு அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செப்.,7,8 மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஜாக்டோ -ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு டிச. 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக இருந்தது. நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அன்றே அடுத்த கட்ட நடவடிக்கையை கூடி தீர்மானிக்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் இவ் வழக்கு டிச.8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ''நீதிமன்ற வழக்கு டிச.8 ம் தேதி விசாரணைக்கு வரஉள்ளதால் அன்று மாலை 4:00 மணிக்கு மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்ட குழுக்கூட்டம் நடைபெறும்'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive