NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி!

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கான இத்திட்டத்தின் முதல் ஆண்டில் 60,000 பேருக்கும், இரண்டாம் ஆண்டில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கும் முதற்கட்டமாகப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக இளைஞர்களில் சுமார் 59 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கிராமப்புற இளைஞர்களை மையமாக வைத்து இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரையில் செலவிடப்படும் எனவும், இதற்கான நிதி மத்திய அரசு மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக மாநில தொழிலாளர் துறைச் செயலாளரான மங்கத் ராம் சர்மா கூறுகையில், “திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாங்கள் செயல்படுத்துகிறோம். இப்பிரிவில் தமிழகம் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி ஆண்டுக்கு ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்திற்கான செலவில் மத்திய அரசின் பங்கு 25 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், மாநில அரசின் சார்பாக இத்திட்டத்தில் செலவிடப்படும் தொகை குறித்த விவரங்கள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும்” என்றார்.




1 Comments:

  1. ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT க்கே தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive