NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் சிக்கல் : இட வசதியின்றி விழிபிதுங்கும் அதிகாரிகள்

போதிய இட வசதியில்லாததால், மரக்கன்றுகள் நடுமாறு, இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
இங்கு, பசுமை வளாகம் உருவாக்கும் நோக்கில், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டுமென, இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
இட வசதியை பொறுத்து, குறைந்தபட்சம், 10 மரக்கன்றுகளாவது நட வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. 
இந்த உத்தரவை பள்ளிகளுக்கு அனுப்பி, கல்வித் துறை அலுவலகங்களில் செயல்படுத்த முடியாமல், அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர்.
பெரும்பாலான உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், பள்ளி வளாகத்திற்குள் உள்ளன. 
கோவை, திருச்சி, துாத்துக்குடி உள்ளிட்ட, சில மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இட வசதி இல்லாததோடு, தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இதனால், இயக்குனர் உத்தரவை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'மரக்கன்றுகள் நட்டு, புகைப்படத்துடன் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
'பெரும்பாலான பள்ளிகளில், போதிய இட வசதி உள்ளது. ஆனால், சில உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இட நெருக்கடி பிரச்னை நீடிக்கிறது. எனவே, இவ்வுத்தரவை முழுமையாக பின்பற்ற இயலாது' என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive