வேலூர் அடுத்த பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
11-ம் வகுப்பு மாணவன் அருண்பிரஷாந்த் ஆசிரியர் திட்டியதால் கடந்த 3-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவணின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்களை தாக்கியதில் 3 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, உயிர்பாதுகாப்பு வழங்க கோரி வரும் திங்கள் கிழமை துவங்க இருக்கும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு பணியை புறக்கணிக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு. இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.TET Study Materials
Home »
» தற்செயல் விடுப்பு எடுத்து காலாண்டுத் தேர்வை புறக்கணிக்க வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் முடிவு









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...