NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கீரை விதையில் விநாயகர் : பள்ளி மாணவர்கள் அசத்தல்


கீரை விதையில் விநாயகர்  : பள்ளி மாணவர்கள் அசத்தல்

கீரை விதையுடன் கூடிய, களிமண்ணாலான விநாயகர் சிலைகளை, பள்ளி மாணவ - மாணவியர் செய்து அசத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பத்தலப்பள்ளி பகுதியில், டி.வி.எஸ்., அகாடமி பள்ளி உள்ளது.

இங்கு, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, படித்து வரும் மாணவ - மாணவியர் கடந்த இரு ஆண்டுகளாக, நீர் நிலைகளுக்கு பாதிப்பில்லாத களிமண்ணாலான விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர். இன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று காலை விநாயகர் சிலைகளை செய்தனர்.அப்போது, களிமண்ணுடன், தண்டுக்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி விதைகளை வைத்து, விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன.அவற்றை, மாணவ - மாணவியர், அவரவர் வீட்டுக்கு கொண்டு சென்று, பூஜை செய்து தண்ணீரில் கரைத்து, பராமரித்தால் கீரை முளைக்கத் துவங்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive