Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு வினாத்தாளில் குளறுபடி:ஒரே கேள்வி, இரண்டு முறை கேட்கப்பட்டுள்ளது


கேரள மாநிலத்தில் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் வினாத்தாளில் இருந்த குளறுபடியால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.


கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.


 இங்கு வசிக்கும் தமிழர்களுக்காக, மொழி சிறுபான்மை பிரிவில், பள்ளிகளில் தமிழ் தேர்வு நடக்கிறது.


 இதில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் வினாத்தாள்களில், பல்வேறு குளறுபடிகள் இருந்தன.

திருவனந்தபுரத்தில் செயல்படும் தேர்வாணையத்தில், தமிழ் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.


 ஆனால், இங்குள்ள ஊழியர்கள் அலட்சியத்தால், வினாத்தாளில் ஒரே கேள்வி, இரண்டு முறை கேட்கப்பட்டுள்ளது.


 இதுபோன்ற பல குளறுபடிகள் வினாத்தாளில் இருந்தன.


இதனால், மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.


எனவே, 'கேரள அரசு தேர்வாணையத்தின் அலட்சியப் போக்கை ஆய்வு செய்து, நியாயமான முறையில் கேள்வித்தாள் தயாரித்து, தேர்வு நடத்த வேண்டும்' என, கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது




1 Comments:

  1. தேவையில்லாமல் எல்லாரையும் குழப்பாதீங்க. தமிழ் நாட்டு செய்தியினை மட்டும் போடுங்க. கேரளா மாநில வினாத்தாள் விவரம் உங்களை எந்த மடையன் கேட்டான்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive