NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏப்ரல் 2019 - மாத ராசிப்பலன்


மேஷம்
மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம்
பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி நல்ல லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் சாதகமான பலனை அடைய முடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள்.
பரிகாரம்- திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி வழிபடுவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் –  21-04-2019 பகல் 11.10 மணி முதல் 23-04-2019 மாலை 05.14 மணி வரை.
ரிஷபம்
ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று இம்மாதத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சகல வித்திலும் மேன்மையை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறலாம்.
பரிகாரம்-  சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் –23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.
மிதுனம்
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றி விட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றங்களும் ஏற்படலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம்-  துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் –  29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை மற்றும் 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை.
கடகம்
கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது  நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.
பரிகாரம்-  புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் காரிய தடைகள் விலகி வெற்றி கிட்டும்.
சந்திராஷ்டமம் –01-04-2019 காலை 08.22 மணி முதல் 03-04-2019 இரவு 08.48 மணி வரை மற்றும் 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.
சிம்மம்
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். தேவைகள் யாவும் பூரத்தியாகும். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
பரிகாரம்-  சிவ பெருமானையும் விநாயக பெருமானையும், வணங்கி வழிபட்டால் எல்லையில்லா தொல்லைகள் கூட இல்லாமல் போய் விடும்.
சந்திராஷ்டமம் –03-04-2019 இரவு 08.48 மணி முதல் 06-04-2019 காலை 07.23 மணி வரை.
கன்னி
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 7, 8-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். வீண் அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் போன்றவை ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்- பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சனி பகவான் வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் –06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.
துலாம்
துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் இம்மாதம் முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றியை தரும் உன்னதமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அனுகூலங்களும் உண்டாகும். சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வீடு மனை வாங்கும் விஷயத்தில் சிறு தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்-  செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம். சஷ்டி விரதம் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் –  08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.
விருச்சிகம்
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கும் சிக்கல்கள் குறையும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.
பரிகாரம்-  பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம் –10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.
தனுசு
தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும் என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
பரிகாரம்-  பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வதும், அம்மன் வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.
சந்திராஷ்டமம் –13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.
மகரம்
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவி பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தாராள தனவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்-  சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடுவது, சனிக்கவசம் மற்றும் ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் –15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.
கும்பம்
கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு சாதகப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அபிவிருத்து பெருகி லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை பெற முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.
பரிகாரம்-  வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சமும், சகல செல்வங்களும் வந்து சேரும்.
சந்திராஷ்டமம் –17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.
மீனம்
மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். ஜென்ம ராசியில் சூரியன் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
பரிகாரம்- பிரதோஷ சிவ பெருமானையும் அம்பிகையும் வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும்.
சந்திராஷ்டமம் –  19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive