NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 29-இல் தேர்வு முடிவு வெளியாகும்

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு ஏப். 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

 இதற்கிடையே பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொழிப் பாடம், ஆங்கிலம் பாடத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
நிகழாண்டு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்துக்கானத் தேர்வு இதுவரை இல்லாத அளவுக்கு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.  அதேபோன்று,  நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட இதில் சராசரி மதிப்பெண் பெறுவது சிரமம்.  மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற  அறிவியல் பாட வினாத்தாளும் கடினமாக இருந்ததால் மாணவ, மாணவியர் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக 5 மற்றும் 2 மதிப்பெண் பகுதிகளில் பெரும்பாலான கேள்விகள் மறைமுகமாகக் கேட்கப்பட்டிருந்ததால் பதிலளிக்க மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், இறுதித் தேர்வாக சமூகவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-ஆவது வாரம் தொடங்கும். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்




1 Comments:

  1. *பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள்*....

    ☠பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று கூறுகிறார்கள் மற்ற தேர்வுகளை ஒப்பீடு செய்யும் போது சமூக அறிவியல் மிகவும் எளிமையாக இருந்தது என்று கூறுகிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது யார்???

    ☠அரசு பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற பாதிப்புகள் பெரும்பாலும் தெரிவதில்லை தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்

    ☠ சமூக அறிவியல் பாடம் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் போது பிற பாடங்களுக்கு ஏன் எடுக்க முடியவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள் சில ஆசிரியர்களுக்கு தகுதி பெரிய அளவுக்கு இல்லை என்றால் கூட வரக்கூடிய வினாவின் மூலமாக அவர்கள் உயர்த்தப் படுகிறார்கள்

    ☠வினாக்கள் தேர்வு செய்யும்போது பிற பாடங்களுக்கு நிகராக வினாக்கள் தேர்வு செய்யலாம்

    ☠எந்தப் பாடமும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க முடியாது சமூக அறிவியல் பாடம் மட்டும் எடுக்க முடியும் என்றால்!!!!

    ☠கல்லூரியில் நாம் படிக்கும் பாடங்களில் வரலாற்றுப் பாடம் தான் மிகவும் எளிமையாக இருக்கிறது பிற பாடங்கள் அனைத்தும் சற்று கடினம் தான் அதனால்தான் இவர்கள் எளிமையான வினாக்களை எடுக்கிறார்களா???

    ☠ தகுதியான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு வினாக்கள் எடுக்கப்படுகிறதா???

    ☠5 படங்களில் ஒரு பாடத்தில் மட்டும் எளிதான வினாக்கள் கேட்கப்படுகிறது என்றால் இது ஒரு மறைமுக தாக்குதல் போல் தெரிகிறது

    ☠பிற பாடங்கள் எடுக்கக்கூடிய ஆசிரியர்கள் எவ்வளவுதான் தகுதிகள் திறமைகள் இருந்தாலும் இந்த தேர்வு மதிப்பெண் வந்த பிறகு பிற ஆசிரியர்கள் பின் தள்ளப் படுகிறார்கள்...

    ☠ சமூக அறிவியல் ஆசிரியர்கள் இவ்வாறு தன்னிச்சையாக நடந்து கொள்ளும்போது மற்ற பாடங்களில் வினா எடுக்கக்கூடிய ஆசிரியர்கள் ஏன் இவ்வாறு செயல்பட கூடாது

    ☠இந்தநிலையில் குமரிமாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றக்கூடிய அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது
    இதற்கான தீர்வு என்ன???

    ☠பிற பாடங்களில் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக் கூடிய அளவில் வினாக்கள் கேட்கப்படுகிறது ஏன் சமூக அறிவியல் பாடத்தில் இது போன்ற வினாக்கள் கேட்கப் படுவதில்லை

    ☠சுயமாக சிந்திக்க கூடிய திறன் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தினால் தான் இப்படி வினாக்கள் கேட்கப்படுகிறதா???

    ☠வினா தயாரிக்கும் ஆசிரியர்களே இப்படி ஓரவஞ்சனை (partiality) யாக நடந்து கொள்ளும் போது.......!!!???

    ☠எல்லா பாடங்களுக்கும் ஒன்றரை நாட்கள் தான் படிப்பதற்கு நேரம் கிடைத்தது

    ☠CBSE-ல் கேட்கப்பட்ட வினாக்கள் சிந்திக்கக் கூடிய அளவில் இருந்தது ஆனால் மாநில தேர்வில் அவ்வாறு இல்லை

    ☠வருங்காலத்திலாவது இதுபோன்ற பாகுபாடுகள் வராத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறை மாற்றங்களை கொண்டு வருமாறு ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

    அன்புடன்,
    குமரி மாவட்ட ஆசிரியர்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive