NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கரோனாவைரஸ் கேள்வியும் பதிலும்...


1. புது கரோனாவைரஸ் என்றால் என்ன?
இது ஒரு மரபணுவைச் சுற்றி சில புரதங்களைக் கொண்டுள்ளது வைரஸ். இந்த மரபணுவை ரைபோ நுக்கிளிக் ஆசிட் என்பர்...
 
இந்த வைரஸ் தொற்றை COVID 19 எனவும் இந்த வைரஸை SARS COV-2 or New Coronavirus என அழைக்கின்றனர்.
2. எங்கிருந்து வந்தது இந்த வைரஸ்?
சீனாவில் உள்ள கூவான் நகரில் தான் முதன் முதலில் மனிதர்களைத் தாக்க ஆரம்பித்தது. வௌவால் அல்லது எறும்பு திண்ணியிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு வந்திருக்கலாம்.
3. வைரஸ்க்கு உயிர் உண்டா?
உயிர் இல்லை என்றாலும் சரி...
உயிர் உண்டு என்றாலும் சரி..
நம் உடல் பல கோடி கோடி செல்களால் ஆனது..
நம் உடலில் உள்ள செல்களுக்குள் இந்த வைரஸ் சென்றால் அங்குள்ள மரபணுவைப் பல ஆயிரக்கணக்கில் நகல் எடுக்கும் மற்றும் புரதங்களை உற்பத்திசெய்ய உதவும் கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டு தன் இனத்தைப் பெருக்கும் வல்லமை படைத்தால், இந்த வைரஸ்க்கு உயிருள்ளது எனலாம்.
 
இந்த வைரஸ் நம் செல்களுக்கு வெளியே கைகளில் அல்லது மேஜையிலிருந்தால் இனப்பெருக்கம் செய்யமுடியாது. அதனால் இதற்கு உயிரில்லை எனலாம்.
4. நம் செல்களில் வைரஸ் பயன்படுத்தி பல்கி மெருகும் அந்த வசதிகள் யாவை?
அவை புரதங்களை உற்பத்தி செய்யும் வசதி.. மற்றும்
மரபணுவைப் பல ஆயிரக்கணக்கில் நகல் எடுக்கும் வசதி.
ஏன் இந்த வைரஸ் தொற்றை மருந்தால் குணப்படுத்த முடியவில்லை?
நம் உடலில் உள்ள செல்களில் உள்ள இந்த இரண்டு வசதிகளைப் பயன்படுத்தித்தான் நாம் இயங்குகின்றோம். இதனைப் பயன்படுத்தி வைரஸ் பல்கிப் பெருகுவதால் இதனைக் கட்டுப்படுத்துவது கடினம்.
நம் செல்களில் வைரஸ் பயன்படுத்தி பல்கிப் பெருகும் அந்த வசதிகளை ஒரு மருந்தால் நிருத்தி விட்டோம் எனவைத்துக்கொள்வோம், இந்த மருந்தால் வைரசால் இனப்பெருக்கத்தை முற்றிலும் நிறுத்த முடியும் என்பது உண்மை. ஆனால் அந்த மருந்தை உட்கொண்டால் நாம் இறந்துவிடுவோம்.
5. இந்த வைரஸ் எவ்வாறு ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகின்றது?
நம் சுவாசதிலால் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு நீர் திவலைகளை உண்டு பண்ணுகின்றோம். இந்த நீர் திவலைகளில் இந்த வைரஸ் அதிகமாக உள்ளது. நாம் பேசும் போதும் இருமும் போதும் இந்த
நீர் திவலைகளை அதிக அளவில் உண்டு பண்ணுகின்றோம்.
தன் சுய நலத்திற்காக இந்த வைரஸ் நமக்கு இருமலை அதிகமாக உண்டு பண்ணுகின்றது. இருமலால் வெளிப்படும் சிறு சிறு உமிழ் நீர்க் குமிழிகளில் இந்த வைரஸ் பல கோடிக்கணக்கில் வெளிப்படுகின்றன. இருமும் போது பல மீட்டர் தூரம் இந்த வைரஸ் உமிழ் நீர்க் குமிழிகளின் மூலம் சுற்றுப்புறத்தில் பரவ ஆரம்பிக்கிறது.
இதனைச் சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் இந்த நோய் தொற்றிக் கொள்கின்றன.
 
6. வைரஸ் வெளியில் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்?
காற்றின் வெப்பநிலை மேலும் இந்த வைரஸ் அமரும் இடத்தின் பிற வேதித் தன்மையைப் பொருத்து இதன் சேதமடையும் கால அளவு மாறுபடும்.
நெகிழி (plastic) -யில், எவர்சில்வர் (Eever silver) பாத்திரங்கள் மற்றும் கருவிகள் மேல் இந்த வைரஸ் 72 மணி நேரங்கள் தன்னைக் காத்துக் கொள்கின்றன.
மரத்தால் ஆன பொருட்களில் 24 மணிநேரமும்; தாமிரத்தாலான பொருட்களின் மேல் 4 மணிநேரமும் இந்த வைரஸால் தாக்குப்பிடிக்க முடிகின்றது.
இந்த கால கட்டத்தில் யாராவது இதனைத் தொட்டால் இந்த வைரஸ் இவர்களுக்குத் தொற்றை ஏற்படுத்திவிட வாய்ப்பு அதிகம்.
7. வைரஸ் நம் உடலில் நோய் உண்டாக்க எத்தனை நாட்கள் எடுக்கின்றன?
இரண்டிலிருந்து 14 நாட்கள் எடுக்கின்றன. இந்த காலகட்டத்திலேயே இந்த வைரஸ் மூச்சுக்காற்றில் வெளிப்பட ஆரம்பித்து விடுகின்றது.
8. இந்த நோயின் அறிகுறிகள் யாவை?
முதலில் காச்சல் வரும்...
பின் வறட்டு இருமல் வரும்...
மேலும் வாசனை அறியும் திறன் இருக்காது..
மூச்சித்தினரல் மற்றும் நிமோனியா போன்ற நுரையீரல் பிரச்சினைகள் வரலாம்
நுரையீரல் பிரச்சினைகள் மிகவும் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்படும். உயிரிழப்பு ஏற்படலாம்.
9. உங்களுக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதா என நீங்களே எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
சாதாரண ஜலதோசத்தின் போது காச்சல் வரலாம் இருமலும் வரலாம். ஆனால் இத்துடன் சேர்த்து மூக்கும் ஒழுகும். ஆனால் இந்த கரோனா வைரஸால் வரும் காச்சலின் பொது மூக்கும் ஒழுகாது !! சளியுடன் இருமல் இருக்காது.. வறட்டு இருமல் தான் வரும்.
 
இவைகள் தான் ஜலதோசத்திற்கும் இந்த கரோனா தொற்றுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்.
காச்சல், வறட்டு இருமல் இருப்பவர்கள் காரோனா தொற்றா? இல்லையா? எனக் கண்டறிய, ஒரு காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். பின் மூச்சை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பத்து வினாடிகள் மூச்சை உள்வாங்கியபடி இருக்கமுடிகின்றதா எனப் பாருங்கள்? முடிந்தால் உங்களுக்கு இந்த வைரஸ் தொற்று இல்லை எனவும், பத்து வினாடிகள் மூச்சை உள்வாங்கியபடி இருக்கமுடியவில்லை, இருமல் வருகின்றது, மூச்சுமுட்டுகின்றது என்றால் உங்களுக்கு இந்த வைரஸ் தொற்றுள்ளது என அனுமானிக்கலாம்.
10. இந்த வைரஸ் தொற்றால் பிழைக்கும் வாய்ப்பு உண்டா?
இந்த வைரஸ் தக்குதலுக்கு உள்ளானவர்களில் சுமார் 5 சதவிகித மக்களை மட்டுமே கொன்று குவிக்கின்றன. இந்த வைரஸால் இறந்தவர்களில் வயதானவர்களும் மற்ற நோய்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும் தான் அதிகம். 10 வயதுக்கு உள்பட்டவர்கள் யாரும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை கொல்லப்படவில்லை.
11. இந்த வைரஸ் தொற்றை எவ்வாறு தடுப்பது?
i. மனிதர்களுக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளிவேண்டும். இந்த இடைவெளியினால் ஒருவரின் மூச்சுக்காற்றிலிருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் தாவமுடியாது. நம் சுவாசத்தில் அந்த வைரஸ் போகாமலிருக்க முகக்கவசம் அணிவது முக்கியம்.
ii. ஆங்காங்கே நோய்த் தொற்றில் உள்ளவர்களின் மூச்சுக்காற்றிலிருந்து வெளிப்பட்ட வைரஸ் இருக்கலாம்.அதனால் அடிக்கடி கைகழுவ வேண்டும்.
iii. மூச்சுக்காற்றிலிருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் தாவுவதால் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்துதல் வேண்டும்.
iv. வைரஸ் தொற்று ஏற்பட்டால் நமக்குத் தெரிய இரண்டு வாரங்கள் எடுக்கின்றது. இந்த இரண்டு வாரக் காலத்தில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவரிடமிருந்து பல மக்களுக்குச் சென்றடையும். எனவே அனைவரும் வீட்டில் தனிமைப்பட்டால் இந்த நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
12. வெளியில் ஏன் நடமாடக்கூடாது?
இந்த வைரஸ் தொற்றை எவ்வாறு தடுப்பது என்பதற்கான நான்கு பதிலும் தான் இந்த கேள்விக்கும் பதில்.
மனிதர்களுக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளிவேண்டும். பொது இடங்களில் இந்த மனிதர்களுக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளி சாத்தியமில்லை.
 
ஆங்காங்கே நோய்த் தொற்றில் உள்ளவர்களின் மூச்சுக்காற்றிலிருந்து வெளிப்பட்ட வைரஸ் இருக்கலாம். அவை பல நாட்கள் அங்கிருந்து உங்களைத் தாக்கலாம்.
வைரஸ் தொற்று ஏற்பட்டால் நமக்குத் தெரிய இரண்டு வாரங்கள் எடுப்பதால், இந்த இரண்டு வாரக் காலத்தில் நோய்த் தொற்று உள்ளவர்கள் பல மக்களுக்கு இந்த நோயைப்பரப்புகின்றனர்.
எனவே அனைவரும் வீட்டில் தனிமைப்பட்டால் இந்த நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
13. நோய் வந்தால் என்ன செய்வது?
மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க வாயைத் துணியில் மூடி இரும வேண்டும்.. நம் சுவாசத்தில் அந்த வைரஸ் போகாமலிருக்க முகக்கவசம் அணிவது முக்கியம்.
இருமல், தும்மலுக்குப் பின் அல்லது வாய், கண், மூக்கைத் தொட்டால் சோப்பு போட்டு நன்கு கைகழுவவேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்தப்படவேண்டும்.
தண்ணீர் நிறையப் பருகவேண்டும்.
விட்டமின் C மற்றும் விட்டமின் D3 அடங்கிய உணவைச் சாப்பிடுதல் சிறந்தது.
விட்டமின் C எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தில் அதிகமுள்ளது.
விட்டமின் D3 முட்டை, காளான், மீன், பால். பாலாடைக்கட்டி, வெண்ணெய், ஆரஞ்சு பழம் அதிகமுள்ளது.
விட்டமின் D3 மூச்சிக்குழல் மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
14. இந்த நோயைக் குணப்படுத்த என்ன மருந்துள்ளது?
இந்த தொற்றால் வரும் காச்சலுக்கு நாம் வழக்கமாகச் சாப்பிடும் பராசிட்டமால் தரப்படுகின்றது....
இருமலைக் கட்டுப்படுத்த மருந்துள்ளது...
ஆனால் இந்த வைரசைக் கொல்ல நம்மிடம் மருந்து எதுவும் இல்லை. எனவே இந்த வைரஸ் தொற்றை வராமல் தடுப்பதே சிறந்த வழி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive