Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல் உண்மை : வயதானால் காது கேட்கும் சக்தியை இழக்கிறதே எதனால்?

images%2528143%2529

நம் உடலில் உள்ள செல்கள் பழுதடையும்போது அவற்றுக்குப் பதிலாக புதிய செல்கள் வளர்சிதை மாற்றத்தின்மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் பழுதடைந்தாலும் , சிதைவுற்றாலும் , புதிய செல்கள் மூளையில் உருவாக வாய்ப்பில்லை. மூளை உறுப்பின் தனிப்பண்பே இதுதான். மூளையின் எந்தப் பகுதிச் செல்கள் பழுதடைகின்றதோ , சிதைவடைகின்றதோ அல்லது முதுமையால் செயல்திறன் குன்றி செயல் இழக்கிறதோ , அந்த ( மூளைப் ) பகுதி , எந்த உடல் உறுப்பை கட்டுப்படுத்துகிறதோ அந்த கட்டுப்பாட்டுச் செயல் பாதிப்பு அடையும்.

முதுமையால் மூளையின் எடையும் குறையும். மூளையின் இரத்த ஓட்டமும் 30 விழுக்காடு குறைந்துவிடும் , செல்களில் அதிக கழிவுப் பொருள்கள் தேங்கிவிடுவதால் செல்கள் விரைவில் செயல்திறனை இழந்து விடுகின்றன. மேலும் , வயதாகும்போது தலைமுடி நரைத்தல் , வழுக்கைவிழுதல் , பார்வை , குறைதல் , மறதி அதிகமாதல் , உடல் மெலிதல் , தோல் சுருங்குதல் போல காதின் உள்ளமைப்புகளும் வலுவிழப்பதால் வயதானால் காது கேட்கும் திறனை ( Adult deaf ) இழக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive