Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி - தமிழக அரசு




தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் வகையில், ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் எனவும் மே 4 ஆம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊருக்கு போக வழியில்ல.. பசிக்கு உணவு இல்ல.. 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive