தஞ்சாவூர்
மாவட்டத்தில் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை
தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் 07.05.2025 ( புதன்கிழமை ) அன்று ,
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி
நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது . இந்த
உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 24.05.2025 ( சனிக்கிழமை ) அன்று பணி
நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து
அரசு அலுவலகங்களும் , கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும்
ஆணையிடப்படுகிறது மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் . செலவாணி முறிச்சட்டம்
1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும்
மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை
நாளான 07.05.2025 ( புதன்கிழமை ) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு
குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது .







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...