Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

hindutamil-prod%2F2025-11-21%2Fd7oqgv6b%2FHigh-Court 
அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கவுரவ விரிவுரை​யாளர்​களை உதவி பேராசிரியர்​களாக பணி வரன்​முறை செய்ய முடி​யாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரி​வித்​துள்ளது.

தமிழகத்​தில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர்​களாக பணி​யாற்றி வந்​தவர்​கள், தங்​களை பணி வரன்​முறை செய்​து, உதவிப் பேராசிரியர்​களாக நியமிக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்து வந்​தனர்.

அதையடுத்து ஆயிரத்து 146 கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக சிறப்​புத் தேர்வு நடத்​தி, உதவி பேராசிரியர்​களாக நியமிப்​பது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.
ஆசிரியர் தேர்வு

இந்​நிலை​யில் கடந்த 2022-ம் ஆண்​டு, ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன்​பாக 3 ஆண்​டு​களாக காலி​யாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கும் சேர்த்து தேர்வு நடத்த புதி​தாக அரசாணை வெளி​யிட்​டது.

இந்த அறி​விப்பை ரத்து செய்​யக் கோரி​யும், 2020-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைப்​படி தங்​களை பணிவரன்​முறை செய்​யக்​கோரியும் கவுரவ விரிவுரை​யாளர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனிநீதிப​தி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்​து, கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி வரன்​முறை செய்​வது தொடர்​பான 2020 அரசாணைப்​படி தேர்வு நடை​முறை​களை முடிக்க வேண்​டும் என கடந்த 2024 ஏப்​ரலில் உத்​தர​விட்​டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர் கல்​வித் துறை, கல்​லூரி கல்வி இயக்​குநரகம், ஆசிரியர் தேர்வு வாரி​யம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மேல்​முறை​யீட்டை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, கவுரவ விரிவுரை​யாளர்​கள் சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​கள் அளவி​லான குழுக்​கள் மூல​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ள​தால், அவர்​களின் கோரிக்​கையை ஏற்​பது என்​பது உச்ச நீதி​மன்​றம் வகுத்​தளித்த போட்​டித் தேர்வு நடை​முறை கொள்​கையை நீரத்​துப்​போகச் செய்​து​விடும் எனக்​கூறி தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தனர்.

மேலும், பணி வரன்​முறை என்​பதும், தேர்வு நடை​முறை என்​பதும் வெவ்​வேறானவை என்​ப​தால் பணி வரன்​முறையை உரிமை​யாக கோர முடி​யாது. எனவே அரசு கல்​லூரி​களில் காலி​யாக உள்ள ஆயிரத்து 292 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கான தேர்வு குறித்த அறி​விப்பை விரை​வில் வெளி​யிட வேண்​டும் என ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive