ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்குத் தகவல் :
வாட்ஸ்அப் வதந்திகளும் உண்மையான தற்போதைய நிலவரமும் : 29.05.2026
முக்கிய அறிவிப்பு: இன்று எந்தவொரு புதிய தீர்ப்பும் வரவில்லை!
இன்று (29-05-2026) செய்தித் தொலைக்காட்சிகளின் பழைய "பிரேக்கிங் நியூஸ்" படங்களை வைத்து, வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. ஆசிரியர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம்.
தற்போதைய அதிகாரப்பூர்வ நிலவரம்:
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்பது தொடர்பான வழக்கில், கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதைக் காரணியாக வைத்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதன் உண்மைத் தன்மை பின்வருமாறு:
அரசின் மறுசீராய்வு மனு (Review Petition): கடந்த 2025 செப்டம்பர் மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அரசின் சிறப்புத் திட்டம்: தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில் இந்த 2026-ஆம் ஆண்டிற்குள் மூன்று சிறப்பு TET தேர்வுகளை நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்ட விசாரணை (ஜூன் 2026): இந்தத் தகுதித் தேர்வு தொடர்பான அனைத்து மறுசீராய்வு மனுக்கள் மற்றும் முக்கிய வழக்குகள் அனைத்தும் வர்ற 2026 ஜூன் மாதத்தில் தான் மீண்டும் நீதிமன்றத்தில் விரிவான விசாரணைக்கு வரவுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...