அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அரசு ஆணைகளின்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‚அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் ஊதியம்‛ என்ற மாநில அரசு செலவுத் தலைப்பில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அவலர்கள் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதந்தோறும் ஊதியப் பட்டிகள் மூலம் கருவூலத்தில் ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் நடக்கும் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,), 6.85 லட்சம் பேர் எழுத
உள்ளனர். டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம்
தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை
நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில
வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு
அறிவுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்கள் /
ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும்
ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம்
வழங்கி தமிழக அரசு உத்தரவு.
மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு
விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை
இணையதளத்தில் இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும்
நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட்
கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல்
மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக்
கல்வித்துறை சேர்க்காததால், அரசின் சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள்
தவிக்கின்றனர்.
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்
மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட
உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.
"ஆசிரியர் பட்டயப் பயிற்சி, முதலாம் ஆண்டு
சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஆன்-லைன்
வழியில் நடக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு NLC 5% பங்குகள் தனியாருக்கு
விற்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கங்கள் மற்றும் அனைத்து
வர்த்தக அமைப்புகள் சார்பாக வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், நெய்வேலியில்
உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்
பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு
பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி
தமிழக அரசு உத்தரவு.
தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு
செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை
வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி பள்ளிக்கு அரை நாள் விடுமுறை
அளித்த தலைமை ஆசிரியர் உள்பட 15 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க
முதன்மைக் கல்வி அதிகாரி பொன்.அருண்பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும்,
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
1. பூக்கும் தாவரத்தின் பெயர்
அ. கிரிப்டோ கேம்கள்
ஆ. பெனரோ கேம்கள்
இ. தலோஃபைட்டா
ஈ. பிரையோஃபைட்டா
டி.இ.டி., தேர்வை எழுதி, பட்டதாரி ஆசிரியர்
பணிக்குச் செல்ல வாய்ப்பு இருந்தும், "10ம் வகுப்பு வரை, பொருளியல் பாடம்
இல்லை' என, கூறி, அனுமதி மறுத்ததால், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக,
பொருளியல் பட்டதாரிகள், புலம்புகின்றனர்.
அரசு
உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்
பயிற்றுனர்களை அப்பணியிடம் நிரப்பப்படும் வரை மாற்றுப்பணியில்
நியமித்துக்கொள்ள அறிவுறை வழங்கி உத்தரவு
2012 - 13ஆம்
ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை
/ உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய
மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம்
வெளியீடு
தொழிற்கல்வியைப் பொறுத்தவரை, நிர்வாக
ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றால்,
அவர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படுகிறது.
டி.இ.டி., தேர்வுக்கு, விண்ணப்பம் செய்வதற்கான
காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. ஆறு லட்சம் பேர், இந்த தேர்வை
எழுதுகின்றனர். விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கவும், நேற்று கடைசி நாள் என்பதால், கூட்டம் அலைமோதியது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 32
மேல்நிலைப்பள்ளி, 36 உயர்நிலைப்பள்ளி, 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு
உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப்பள்ளி, 122 தொடக்கப்பள்ளி, 30 மழலையர்
பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 98 ஆயிரத்து 857 மாணவ,மாணவிகள்
படிக்கின்றனர். 4041 ஆசிரியர்கள் உள்ளனர்.
வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013 இன்று கடைசி
நாளாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில்
இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல
பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள்
முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து வரும், 10ம் தேதி, பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்)
செயற்கைக்கோளை விண்வெளியில் நிறுவ இருக்கும் பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட்,
இன்றிரவு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.
நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதிதிராவிட
நலப் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, ஆதிதிராவிட மாணவருக்கு,
நாளை பரிசு வழங்கப்படுகிறது.
நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள ஆன்லைன் தேர்வு எழுதிய அனைவருக்கும் ( upto 30.06.2013 - 11.00 P .M ) அவரவர் பெற்ற மதிப்பெண் விவரம் அவர்கள் கொடுத்த EMAIL ID க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. (முழுமையாக EMAIL ID பதிவு செய்யாத ஒரு சிலருக்கு தவிர)
Thanks to Mr. Damodiran, B.T.Asst., GHSS., Melatur, Thanjavor Dt.
வாசகர்கள் தங்களிடம் இது போன்ற பல்வேறு பல்கலைகழகங்களின் M.Phil Time Table இருந்தால் நமது Email ID - Padasalai.Net@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
Thanks to Mr. R. Damodiran, B.T.Asst.,
GHSS, Melatur, Thanjavor Dt.
பள்ளிக் கல்வித் துறையில் 51 மாவட்டக் கல்வி
அலுவலர் பணியிடங்களும், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும்
நிரப்பப்படாமல் உள்ளன.
கப்பல்,
விமானப் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பயன்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ
என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட்
திங்கள்கிழமை (ஜூலை 1) இரவு 11.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்
செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி
அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின்
கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும்
குறைந்து வருகிறது.
ஒரு வகுப்புக்கு 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும்
தனியார் பள்ளிகளில் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்து
சர்வே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கூடுதலாக சேர்க்கப்பட்ட 50
ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் புதிய
பள்ளிகள் தொடங்க 68 பேருக்கு தமிழக அரசு தடையில்லா சான்று (என்ஓசி)
வழங்கியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்
பள்ளிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்குவதில் கெடுபிடிகளை காட்டி
வருகிறது. அங்கீகாரம் புதுப்பிப்பதிலும் விதிகளை கடுமையாக்கியுள்ளது.