NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மன உளைச்சலில் 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்கள் : 4 ஆண்டுகளாக இல்லை கலந்தாய்வு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியர் பயிற்றுனருக்கான
கலந்தாய்வு நான்கு ஆண்டுகளாக நடக்காததால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.ஆண்டுதோறும் பள்ளி கல்வி கலந்தாய்வுக்கு பின், ஆசிரியர் பயிற்றுனருக்கான மாறுதல் நடக்கும். இது 2013க்கு பின் நடக்கவில்லை.

 'ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்,' என்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை

.இந்நிலையில் 2014ல் பத்து பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுனர் என நிர்ணயம் செய்யப் பட்டது.

இதனால் மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 398 பேர் பணிநிரவல் அடிப்படையில் வட மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பின் புதிய நியமனம் இல்லை. இதனால் 'காலிப் பணியிடம் இல்லை,' என கூறி 2014 - 17 வரை கலந்தாய்வு நடத்தாததால் 3944 ஆசிரியர் பயிற்றுனர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதன் உத்தரவால் 23.2.2018 ல் 350 பேர் பள்ளிகளுக்கு ஆசிரியராக மாற்றப்பட்டனர்.

 காலியிடமான அந்த 350 இடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:

பள்ளி கல்விக்கு மாற்றப்பட்ட 350 பேர் தவிர பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலம் புதிய காலி பணியிடங்கள் ஏற்பட்டு 600க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது உள்ளன.

ஜூன் 30க்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை என்றால், ஜூலை 1 முதல் குடும்பத்துடன் சென்னையில் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive