Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

அனைத்து மேல்நிலைப்பள்ளியிலும் உதவி தலைமையாசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் என தஞ்சை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தியுள் ளது.


            தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணி தலைமை வகித்தார். மாவ ட்டச் செயலர் சின்னை யன் வரவேற்றார். மாவட் ட அமைப்புச் செயலர் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாநகர், இடையாத்தி, திருப்புறம்பியம், பொய்யுண்டார்கோட்டை, இலுப்பைதோ ப்பு, பட்டீஸ்வரம் உள்பட அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக் கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை தமிழக அரசு களைய வேண்டும். ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும்¢ மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் உதவி தலைமையாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். 30 ஆண்டுகள் ஒரே பதவியில் உயர்வு இல்லாத நிலைக்கு ஒரு சிறப்பு வளர் ஊதியம் அளிக்கும் அரசாரணையில் திருத்தம் செய்து தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதிவி உயர்வை பதவி துறப்பு செய்தாலும் சிறப்பு வளர் ஊதியம் வழங்க வே ண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive