Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணி கலந்தாய்வுக்கு மணக்கோலத்தில் வந்த வாலிபர்

       திருமணம் முடிந்தவுடன், மனைவியுடன் வந்து, ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், வாலிபர் பங்கேற்றார்.
      சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் ஜெயபால், 30. இவருக்கும், ஆனந்தீஸ்வரி என்ற பெண்ணுக்கும், கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடித்தவுடன், மனைவியை அழைத்து கொண்டு, சேலம், சிறுமலர் பள்ளியில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்றார்.

மணக்கோலத்தில் வந்தவரை, அங்கிருந்தவர்கள், ஆச்சர்யத்துடன் பார்த்தனர். விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூர் பள்ளியில், பணிபுரிய நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து, ஜெயபால் கூறியதாவது:கலந்தாய்வு பற்றி, 28ம் தேதி இரவு தான் தெரியும். திருமணம் முடிந்தவுடன், மனைவியை தனியாக விட்டு வருவதற்கு மனம் வரவில்லை. அதனால், கார் மூலம் கலந்தாய்வில் பங்கேற்றேன்.இவ்வாறு ஜெயபால் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive