Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தந்தை இறந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

      தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார். அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.
 
         இந்நிலையில் 18 வயதைக் கடந்த அழகேசன், தனது தந்தை உயிரிழந்ததால் தனக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி விண்ணப்பித்தார். எனினும் தந்தை உயிரிழந்தபோது அழகேசன் சிறுவனாக இருந்ததால் அவருக்கு பணி வழங்க முடியாது என கடந்த 2012-ம் ஆண்டில் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
 
         இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

             இதனை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மனுதாரரின் தந்தை உயிரிழந்தபோது அவர் சிறுவனாக இருந்தார். வேலை வேண்டி விண்ணப்பித்த அவரது தாயார் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும், தனக்குப் பதிலாக மகனுக்கு வேலை வழங்குமாறு கோரி மனுதாரரின் தாயார் கூறவில்லை. ஆகவே, அவருக்கு பணி வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து விட்டனர். மனுதாரரின் தந்தை உயிரிழந்தவுடன் அவரது தாயார் வேலை கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் அப்படியே நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தாயாருக்குப் பதில் தனக்கு வேலை தர வேண்டும் என கோரி மகன் விண்ணப்பித்தார். தனக்குதான் வேலை வேண்டும் என தாயார் வற்புறுத்தவில்லை. மகனுக்கு வேலை வழங்குவதை அவர் விரும்புகிறார்.
 
          இந்நிலையில் தாயாரின் விண்ணப்பத்தை காரணம் காட்டி மகனுக்கு வேலை தர மறுக்க இயலாது. கருணை அடிப்படையில் வேலை என்பது உயிரிழந்த அரசு ஊழியரின் ஒட்டுமொத்த குடும் பத்தை பாதுகாக்கதானே தவிர, அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்காக மட்டும் அல்ல. ஆகவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive