NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு

          ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர். 
 
         வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணி நியமன கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் பணியில் யாரும் சேரக்கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் சிலர் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, கவுன்சலிங்கில் பணி இடங்களை தேர்வு செய்தவர்கள் நேற்று மதியமே அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன உத்தரவுகளை பெற்றுக் கொண்டு உடனடியாக பணியில் சேரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கவுன்சலிங்கில் கலந்து கொண்டு பணியிடங்களை தேர்வு செய்தவர்கள் அனைவருக்கும் 25ம் தேதி பிற்பகல் முதல் அந்தந்த கவுன்சலிங் மையங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன ஆணைகளை பெற்று, பணி நியமனம் பெற்ற பள்ளிகளில் உடனடியாக பணியில் சேர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மதியம் அந்தந்த கவுன்சலிங் மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று பணி நியமன ஆணைகளை பெற்றுச் சென்றனர். பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.




19 Comments:

  1. ஒரு புதிய விளையட்டினை தொடங்கியுள்ளது,கல்வித்துறை.அவசர அவ்சர்மாகப் பணினியமணங்களை முடித்துள்ளது.உச்சநீதிமன்றம் இறுதித்தீர்பு வழங்கும் வரை காத்திராமல் அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன?பணியில் இரண்டாண்டுகள் இருந்த கணிணி ஆசிரியகளின் தற்போதய நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்படவேண்டுமா?அவசரம் ஏன்?

    ReplyDelete
  2. Those who got job with below 90 in mark candidate jobs will gone any time, every one must agree that both weitage and relaxation are not acceptable one.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This government & Judicial department are not for public. They are running for only politician and probe person. Democracy is killed by the Government.

    ReplyDelete
  6. ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்

    தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில் TRB நடத்திய தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு பணிவழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேர்வு நடந்து முடிந்த பின்பு அரசு 50% இலக்கை மாற்றி 15% தளர்வு கொடுத்து 35% எடுத்தால் போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் TRB தேர்வு முடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிட்டது.

    தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு. இதனால் 35% மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 652 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    TET-ல் 5% தளர்வு அளித்தது தவறு என்றும், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் 50% என்று உள்ளதை 15% தளர்வு 35% ஆக குறைத்தது அளித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை மட்டும் 5% தளர்வால் தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கணினி ஆசிரியர்கள் தேர்வு விஷயத்தில் 50% என்று உள்ளதை 15% தளர்வு அளித்து 35% மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை,
    மாறாக 50%-திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 35% மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
    TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம், இதே TRB நடத்திய வேதர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம். நீதி எங்கே இருக்கின்றது.
    தமிழக அரசும் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
    TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று தான்(26.09.14) பணியில் சேர உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர்கள் தேர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையான ஊதியத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை (652 கணினி ஆசிரியர்களை) பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    652 கணினி ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை --------------------------.(டேஷ்).

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. பாவப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
    • நாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் ஓட்டுரீமை உண்டு…………..
    • சமதர்மம் ,சமுகநீதி என்றால் என்ன ?
    • அரசியல் கட்சிகளே ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை நடைமுறை படுத்தும்போது…………………………..
    • அரசு வேளையில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வேளை முறை ஏன் அமல் படுத்த கூடாது ?
    • அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் பட்டதாரி,முதல் அரசு வேலை பெறும்
    குடும்பம் என இலக்கு நிர்ணயம் செய்து தகுதி உள்ளவர்களுக்கு 20% அரசு
    வேளையில் ஒதுக்கிடு செய்தால் எல்லா மக்களும் பயன்பெறலாம்.மழை பெய்தால்
    விவசாயம் பெருகும் காவிரி,கடைமடை பகுதிக்கு காவேரி தண்ணீர் மக்கள் வாழ்வு
    வளம் பெற இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • 2016 ம் தேர்தல் மிகப்பெரிய மாற்றம் வர வாய்ப்பாக அமையும்.
    • எல்லேரும் ஏற்க்கும் தீர்ப்பு எடுக்கப்பட்டால் சுபம்……………
    • 15 ஆயிரம் குடும்பமா ………….!
    • 60 ஆயிரம் குடும்பமா ………….!
    • இப்போது நிலை மிகவும் சிக்கலானது நல்ல தீர்வு எடுக்கப்பட்டால் சுபம்…………
    • அரசு வழங்கும் டெட் வெய்ட்ஜ் முறை.
    • டெட் வெய்ட்ஜ் முறைப்படிபார்தால் அதிக ஓட்டு பெற்ற இளைஞர்களுக்கு……..
    • அமைச்சர் பதவி உண்டா?
    • மக்கல் நலன் என்றால் என்ன ?
    • தமிழர்கள் நலன் காக்கும் செயல் எது?
    • தமிழன் ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் தமிழகம் இருந்து என்ன பயன்?
    • தலைவர்கள் இருந்து என்ன பயன்?
    • மக்கலுக்காக அரசா? அரசியலுகாக மக்களா?
    • தமிழ்ன் நலம் காத்த தலைவர்கள் எங்கே?
    • மனித உரிமைகள் என்றால் என்ன ?
    • 30 -58 வயது வரை வேலை செய்யும் அறிவார்ந்தவர்கள் அனுபவம் ,திறமை
    ,தமிழகத்திற்க்கு தேவயில்லயா?
    • பட்டதாரிகள் பொறுத்தவரை
    • வேலைவாய்ப்பு + டெட் +அனுபவம் என 3 க்கும் மதிப்பெண் வழங்கலாம்.

    Quick Reply
    To: chidambaramjagan

    ReplyDelete
  8. மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ
    மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின்
    அனுபவம் மட்டும் வேண்டாம்
    தமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்
    Quick Reply
    Quick Reply

    ReplyDelete
    Replies
    1. ஐயா தமிழனுக்கு குழி தோண்டுபவன் இன்னொரு தமிழன்தான் என்பதை அரசியல் வாதிகள் நமக்கு மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திவிட்டாா்கள்.

      Delete
  9. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
    வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
    வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
    20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
    பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
    இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு
    மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்......
    Quick Reply
    To: chidambaramjagan

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரம் ஐயா அவா்களே . புலி பசித்தாலும் புல் திங்காது. அதனால் தயவுசெய்து அ......மா என்ற வாா்த்தையை நம்மை பெற்றவளுக்கு மட்டும் சொந்தமாக்குங்கள். தயவு செய்து மற்றவா்களுக்கு விற்றுவிடாதீா்கள்.

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. நமது கல்வத்துறை அதிகாரி போல் மாநிலத்துக்கு ஒருவர் இருந்தால் போதும். எல்லோரும். அகதியாக வேறு நாட்டிற்கு போக வேண்டியது தான் ... இந்த லட்சணத்துல கல்வி அறிவுல நம் மாநிலம் முதலிடமாம்...... இதுவல்ல அடுத்த இலக்கு 234 க்கு 234 ஆம்..... நாங்களும் காத்து கொண்டு தான் இருக்கிறோம். 2016 தேர்தலுக்காக....... ..ஓட்டு போடுவது எங்களை ப் போன்ற ஏழைகள் தான் மறந்து விடாதீர்கள்

    ReplyDelete
  12. Madu meithavan kuda ippadi oru judgement solla maattan. 90 mark below vangi jobla serlam ana above 90 Eduthu nanga veliya nakkanuma, enna theerpuda idhu. Engal vedhanai ungalukkallam happiya irukka. Kalam bathil sollum.

    ReplyDelete
  13. ovvoru nalum intha websitai parthu parthu nan oru mana noyali pol agivitten thoonga mudiyala. Varumai engal vethanai yarukkum puriyavillai. Antha kadavullukkum.

    ReplyDelete
  14. Dear brothers and sisters , unga varutham puriyudu. naanum ungalla oruthy dan. Pala murai suicide pannikalama nu kooda yosichirukken .Idhilurundhu naam veliyil vandaaga vendum. manam udaindhu nimmadhi yatru iruppadal nashtam nammakke. naan idhil irundu veliyera muyarchithu vetri adaya thodangi ullen. contact me 9884652666

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive