NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் மாலை நேரக் கல்லூரிகள்: விஜயகாந்த் பேச்சு

         தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் மாலை நேரக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
 
          தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குன்னூரில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக வேட்பாளர்கள் சிதம்பரம் (குன்னூர்), கிங்ஸ்நாரசஸ் (உதகை), மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தமிழ்மணி (கூடலூர்) ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து விஜயகாந்த் பேசியதாவது:


குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் இதனை ஒருவழிப் பாதையாக மாற்றுவதுடன் இம்மாவட்டத்துக்கு மாற்றுப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பசுந்தேயிலைக்கு உரிய விலை தருவதாக திமுக, அதிமுக கூறி வந்தாலும் இன்று வரை எந்தப் பலனும் இல்லை. ஈழவர் தீயா சமுதாய மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் தற்போதுதான் திமுக, அதிமுக மதுவிலக்கை பற்றி பேசுகின்றன. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு வழங்கப்படும். பள்ளிகளில் மாலை நேரக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார்.

இந்தக் கூட்டத்தில், தேமுதிக மாவட்டச் செயலாளர் எல்.கிருஷ்ணமூர்த்தி, நகரச் செயலாளர் ஜெகதீஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சகாதேவன், தமாகா நகரத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive