எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு

          எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி நேற்று ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
         டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு மறுதேர்வு ஜூன் 4 முதல் 6-ம் தேதி வரை (தினமும் 2 ஷிப்டுகள்) ஆன்லைனில் நடத்தப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலும் புதுச்சேரியிலும் தேர்வு நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பணியாளர் தேர்வாணையத்தின் இணை யதளத்தில் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாதிரி ஆன்லைன் தேர்வும் இணையதளத்தில் (www.sscsr.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப் பதாரர்கள் இதை பயன்படுத்தி ஆன் லைன் தேர்வை நன்கு பரிச்சயப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive