Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்? - சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு பணி

          மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. 
 
         அந்த வகையில், தற்போது மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் காலியாகவுள்ள சுருக்கெழுத்தர் (கிரேடு-சி, கிரேடு-டி) பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை மாதம் 31-ஆம் தேதி போட்டித் தேர்வை நடத்தவிருக்கிறது.

காலியிடங்கள் குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

தேர்வின் பெயர்:சுருக்கெழுத்தர் (Stenographer)  கிரேடி 'சி', 'டி'

வயதுவரம்பு:01.08.2016 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு5 ஆண்டுகளும், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி:பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (சுருக்கெழுத்து தேர்வு) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, ரீசனிங், ஆங்கில மொழி ஆகிய 3 பகுதிகளில் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு. 4 கேள்விகளுக்குத்தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சுருக்கெழுத்து தேர்வுக்கு (Skill Test) அழைக்கப்படுவார்கள்.சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இறுதி பணி நியமனம், துறைகள் ஒதுக்கீடு ஆகியவைஎழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே நடைபெறும்.

தேர்வு மையங்கள்:பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை, மதுரை, விசாகப்பட்டினம்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதனை htp://ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு, தொழில்நுட்பத் தகுதி உடையவர்கள் htp://ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும்இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.06.2016

மேலும், தொழில்நுட்பத் தகுதி, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சுருக்கெழுத்தர் பணியில் சேருபவர்கள் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் எழுதி உயர் பணிகளுக்குச் செல்லலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive