இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூன் 14 முதல் 22-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவோ அல்லது தேர்வு மையங்கள் வாயிலாகவோ ஆன்-லைன் மூலமாக வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்திலேயே வெளியிடப்படும்.
அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட விவரங்கள் அனுமதிச் சீட்டில் இடம்பெற்றிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.