NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட்., கவுன்சிலிங்: அரசு கல்லூரிகளில் சேர்க்கைக்கு சிக்கல்


தமிழகத்தில் ஆசிரியர் படிப்புக்கான(பி.எட்.,) கவுன்சிலிங் இதுவரை நடத்தப் படாததால் தனியார் கல்லுாரிகளில் மாணவர்கள் பலர் சேர்ந்துவிட்டதால், அரசு கல்லுாரிகளில் சேர்க்கை முழுமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 அரசு மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம்.

போதிய ஆசிரியர்கள் இல்லை எனக்கூறி 400 சீட்கள் கொண்ட 3 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

இதை காரணமாக கொண்டு அரசு தரப்பில் மற்ற கல்லுாரிகளில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இதனால் தனியார் கல்லுாரிகள் மாணவர்களை சேர்த்துக்கொண்டன. ஆன்லைனிலும் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

 இதில் பலர் அரசு கல்வியியல் கல்லுாரிகளில் சேர காத்திருந்தவர்கள். இனி கவுன்சிலிங் நடத்தினால் பாதிக்கப்படுவது அரசு கல்லுாரிகளும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களும்தான்.

காரணம், தாமதமான சேர்க்கையால் அரசு கல்லுாரிகளில் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை இருக்காது.

 தனியார் கல்லுாரிகளில் தற்போது படிக்கும் ஏழ்மை மாணவர்கள் கவுன்சிலிங்கில் 'சீட்' கிடைத்து சேர முற்படும்போது, கல்வி கட்டணத்தை தனியார் கல்லுாரிகளிடம் இருந்து பெற முடியாது.

வழக்கமாக ஜூலையில் கவுன்சிலிங் ஆரம்பித்து ஆக.,ல் வகுப்புகள் தொடங்கும். கொரோனாவால் தள்ளிபோனது. கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் செப்.,ல் கவுன்சிலிங் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.


 இதுவரை நடத்தாததால் பாதிக்கப்பட்டுள்ளது குறைந்த கல்வி கட்டணத்தில் அரசு கல்லுாரிகளில் சேரவிருந்த மாணவர்கள்தான்.எனவே இவர்களின் நலன்கருதி உடனடியாக கவுன்சிலிங் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive