Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை வழங்க அரசு சம்மதம்.

.com/

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்க மத்திய அரசு சம்மதித்து விட்டதாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில், டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். 28 முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தோம்.

ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதில், நிறுத்தி வைக்கப்பட்ட 3 அகவிலைப்படி உயர்வையும், வருகிற ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து மொத்தமாக செப்டம்பர் மாதம் வழங்க மந்திரிசபை செயலாளர் ஒப்புக்கொண்டார். இந்த முடிவு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive