கேரளாவில் கடந்த கல்வி ஆண்டில் 4 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஏற் கனவே வெளியான நிலையில், 30 ஆயிரம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களில் தவறுகள் காணப்பட்டன.
மேல்நிலைப் பள்ளி இயக்குனரகம் 'சிடி' மூலம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், கேரளா வுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அச்சகத்தில் மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடப் பட்டன. தரவு பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப தவறு காரணமாக, மதிப்பெண் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளது.
அச்சகம் தவறை ஒப்புக்கொண்டு, திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. எனினும், இந்த பிரச்னை அந்த மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத் துள்ளது. இதனால், இதுகுறித்து விசாரணை நடத்த கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...