ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார் பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டு வரப்பட் டது. இதன்மூலம் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வரு கின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான வினாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை 4 கட்டங்களாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட உள்ளன.
* அதன்படி முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18ம் தேதி வரையும், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல் 18ம் தேதி வரையும், 3வது கட்டமாக நவம்பர் 3 முதல் 14ம் தேதி வரையும், 4வது மற்றும் இறுதி கட்டமாக ஜனவரி 27 முதல் 30ம் தேதி வரையும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த வினாடி-வினாவுக்கான கேள்விகளை அந்தந்த வகுப்பாசிரியர்கள் மட்டுமே உருவாக்க வேண்டும். மதிப்பீடு முடிந்தபின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும். போட்டிகளை சிறந்த முறை யில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...