தமிழகத்தில்
காலியாக உள்ள 15,000 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவது அரசின் முக்கிய முன்னுரிமையாகும். தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன," என்றார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...