கர்நாடகாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு
கர்நாடக அரசு குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தியதன் மூலம், திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் கீழ் பெங்களூருவில் உள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.23,376 ஆக உயர்ந்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பின்படி, பெங்களூருவில் உள்ள திறன்மிகு தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ.31,114 பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அதேசமயம், கர்நாடகாவின் பிற பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம், இடம் மற்றும் பிரிவைப் பொறுத்து ரூ.19,300 முதல் ரூ.21,251 வரை இருக்கும்
கர்நாடக அரசு சனிக்கிழமையன்று தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தியது. திருத்தப்பட்ட இந்த ஊதியக் கட்டமைப்பின் கீழ், பெங்களூருவில் உள்ள தொழிலாளர்கள் இனி குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக ரூ.23,376 பெறுவார்கள்.
இந்த முடிவை அறிவித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் என்றும் கூறினார்.
இதை ஒரு பெரிய தொழிலாளர் சீர்திருத்தம் என்று குறிப்பிட்ட லாட், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

"தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி எங்கள் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள தொழிலாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றியுள்ளது," என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார் லாட்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...