மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் இலவச மனநல ஆலோசனைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!

12-ம் வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, 'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...