மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என அறிவிப்பு

விபி ஜி ராம் ஜி திட்டம்
விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G - Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission - Gramin) திட்டம் என்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக 2026-ம் ஆண்டு ஜூலை 1 முதல் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற குடும்பங்களுக்கு அதிக வேலை நாட்கள் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை வழங்க இலக்கு வைத்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பெயர் மாற்றம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) -> VB-G RAM G.
வேலை நாட்கள்:
100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்வு.
நோக்கம்:
2047-க்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை அடைய கிராமப்புற வேலைவாய்ப்பை மேம்படுத்துதல்.
நிதிப் பகிர்வு:
2025-26-ம் ஆண்டிற்கான திட்ட நிதி ஒதுக்கீடு ₹95,000 கோடிக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயனாளி:
கிராமப்புறங்களில் உள்ள வயது வந்த உறுப்பினர்கள் திறமையற்ற கைமுறை வேலைகளில் ஈடுபடலாம்.
முக்கிய மாற்றங்கள்:
முன்பு 90:10 (மத்திய:மாநில) நிதிப் பங்கீடு இருந்தது, புதிய சட்டத்தின்படி அது 60:40 என்ற விகிதத்தில் மாறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலை தேடி 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், வேலையின்மை உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், 60 நாட்கள் வேலை இல்லாத காலமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 18 டிசம்பர் 2025 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்றும், இது தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (MGNREGA) விதிமுறைகளை படிப்படியாக மாற்றியமைக்கும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், கிராமப்புறத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமங்களுக்கு இந்த திட்டம் ஒரு புதிய விடியலை கொண்டுவரும் என்று மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுகான், “இந்த புதிய திட்டமானது கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கும். இச்சட்டம் முழுமையாக அமலாகும் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் அனைத்து தற்போதைய விதிகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். புதிய சட்டம் அமலாகும் வரையிலான காலத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.
இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி செய்யப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் கீழ் செயல்பாட்டுத் தயார் நிலையை நிறைவு செய்ய மாநிலங்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
சில மாநிலங்கள் தங்கள் ஏற்பாடுகளை இன்னும் நிறைவு செய்யாதிருந்தாலும் கூட, ஜூலை 1 முதல் கிராமப்புற வேலைவாய்ப்புப் பணிகளுக்கான நிதி விபி ஜி ராம் ஜி சட்டத்தின் மூலமாகவே வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் இத்திட்டதுக்காக மத்திய அரசு ரூ.95,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. அதேவேளையில் மாநிலங்களும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கீடுகளைச் செய்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஏற்படும் மொத்த ஆண்டுச் செலவு ரூ.1.51 லட்சம் கோடிகளை தாண்டும்” என்று அவர் தெரிவித்தார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...